வேலை வாங்கித் தருவதாக முதல்வர் மருமகன் சபரீசன் பெயரில் மோசடி.! பெண் கொடுத்த பரபரப்பு புகார்.!

முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் பெயரில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண் ஊராட்சி மன்ற தலைவியிடம் இருந்து 77 லட்சம் மோசடி செய்துள்ளதாக அந்த பெண் ஊராட்சி மன்ற தலைவர் போலீசில் புகார் கொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தின் நரியம்பட்டு ஊராட்சி மன்றத்தின் தலைவராக பாரதி என்ற பெண் இருக்கின்றார். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில் அவர், “முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தான் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவிக்கு வேலைக்கு ஆள் எடுப்பதாக என்னிடம் சிலர் கூறினர்.

அந்த பதவியை எனக்கு வாங்கித் தருவதாக கூறி என்னிடம் 77 லட்சம் ரூபாயை கடந்த மாதத்தில் கைது செய்யப்பட்ட போலி ஐஏஎஸ்ஸான சசிகுமார், ராஜலட்சுமி மற்றும் அவரது கணவர் புவனேஷ் ஆகிய மூன்று பேரும் பெற்றுக்கொண்டு ஏமாற்றி விட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

Baskar

Next Post

இந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு....? மத்திய சுகாதாரத்துறை றை தகவல்...!

Fri Oct 28 , 2022
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 2,2 08 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 12 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,557 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

You May Like