எல்லாம் எச்சரிக்கையா இருங்க…! வரும் 18-ம் தேதி வரை தமிழகத்தில் வானிலை இப்படி தான் இருக்கும்…!

தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நாளை முதல் 18-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 முதல் 21 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

Vignesh

Next Post

Wow...! இவர்களுக்கும் 33 சதவீத ஊதிய உயர்வு...! ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்...! மத்திய அரசு அறிவிப்பு...

Wed Feb 15 , 2023
காதி காட்டன் (கதர் பருத்தி) நெசவாளர்களுக்கு 33 சதவீத ஊதிய உயர்வை காதி கிராமத் தொழில் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த மாதம் 30-ம் தேதி குஜராத் மாநிலம் கட்ச்சில் நடைபெற்ற காதி கிராமத் தொழில் ஆணையத்தின் 694-வது கூட்டத்தில் பிரதமர் விடுத்த அழைப்பை கருத்தில் கொண்டு, தொழிலாளர்களின் ஊதியத்தை நூல் சுருளுக்கு ரூ.7.50-லிருந்து ரூ.10-ஆக உயர்த்த, மனோஜ் குமாரின் தலைமையில் இயங்கும் கேவிஐசி முடிவு செய்தது. இதன்மூலம் கைவினைஞர்களின் மாதாந்திர […]
money11

You May Like