‘எப்புட்றா..’ ஐடி ஊழியரிடமே 10 லட்சம் ‘ஆட்டைய’ போட்ட ஹேக்கிங் கும்பல்!

பான் கார்டு புதுப்பித்து தருவதாக கூறி அமெரிக்காவில் பணியாற்றிக் கொண்டிருக்கும் சென்னையைச் சார்ந்த மென்பொருளாளரிடம் 10 லட்ச ரூபாய் மோசடி செய்த கும்பலை சென்னை விருகம்பாக்கம் போலீஸ் ஆர் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சார்ந்தவர் பத்ரி நாராயணன். இவர் அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஆக பணியாற்றி வருகிறார். குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வந்த இவர் தனது தாயார் மல்லிகாவை பார்ப்பதற்காக கடந்த டிசம்பர் மாதம் இந்தியா வந்திருக்கிறார். இந்நிலையில் நேற்று ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்கச் சென்ற இவர் ஏடிஎம் கார்டு இன் ரகசிய எண்ணை தவறுதலாக உள்ளீடு செய்ததாக தெரிகிறது. இதனை அடுத்து இவரது ஏடிஎம் கார்டு பிளாக் செய்யப்பட்டது. ஏடிஎம் பிளாக் செய்யப்பட்ட சிறிது நேரத்தில் அவருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்திருக்கிறது அதில் பேசிய மர்ம நபர் தான் வங்கி சேவை மையத்திலிருந்து பேசுவதாகவும் தங்களது பான் கார்டு காலாவதியாகி விட்டதால் அதனை புதுப்பித்தால்தான் ஏடிஎம் கார்டு வேலை செய்யும் என தெரிவித்திருக்கிறார்.


மேலும் பத்ரி நாராயணன் இடம் ஆதார் கார்டு உள்ளிட்ட தகவல்களையும் கேட்டு பெற்றிருக்கிறார். தனது செல்போனிலிருந்து பத்ரி நாராயணன் செல்போன் இருக்கு ஒரு லிங்க் ஒன்றையும் அனுப்பி தகவல்களை சரி பார்க்குமாறு சொல்லி இருக்கிறார். இதனால் அந்த நபர் கூறுவது உண்மை என்று நம்பிய பத்ரி நாராயணன் அவரது கட்டளைகளை பின்தொடர்ந்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவர் அழைப்பை துண்டித்த சிறிது நேரத்தில் இவரது வங்கிக் கணக்கில் இருந்து மூன்று தவணையாக 10 லட்ச ரூபாய் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாக அவருக்கு எஸ்எம்எஸ் வந்திருக்கிறது. இதனைக் கண்டு அதிர்ந்த அவர் உடனடியாக வங்கி சேவை மையத்தை தொடர்பு கொண்டு போது தான் மர்ம நபர்களால் ஏமாற்றப்பட்டு இருப்பது தெரிந்திருக்கிறது. இது தொடர்பாக அவர் சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

1newsnationuser5

Next Post

'மாமா லிஃப்ட் தரேன் வா....'! காட்டு வழி கூட்டிச் சென்று 14 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை!

Fri Feb 17 , 2023
பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பிய மாணவியை வீட்டில் இறக்கி விடுவதாக கூறி அழைத்துச் சென்று பலாத்காரம் செய்த நபரை கன்னியாகுமரி மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையம் கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சார்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் படித்து வருகிறார். சம்பவம் நடந்த தினத்தன்று பள்ளி முடிந்து வீடு […]
IMG 20230217 WA0068

You May Like