கடந்த நவம்பர் 1ம் தேதி முதல் வடகிழக்கு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த வெள்ள பணிகளுக்காக அரசு இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் பல இடங்களில் வழக்கத்திற்கு மாறாக பொதுமக்கள் தங்களது அன்றாட பணிகள் முடங்கி பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் திருவொற்றியூர் ரெயில்வே சுரங்கப்பாதை எதிர்பாராத வகையில் மழைநீரால் மூழ்கியது பெரும் சிரமமாக உள்ளது. இரவு பகல் என பாராது கனத்த மழை பெய்ததால் சென்னை திருவொற்றியூர் பகுதியின் மாணிக்கம் நகரின் உள்ள இரயில்வே சுரங்கப்பாதை முழுவதுமாக மழை நீரில் மூழ்கி உள்ளது. இது அதிகப்படியானமக்கள் அதிகம் பயன்படுத்தும் வழிப்பாதையாகும்.
இச்சம்பவத்தினால் ஜோதி நகர், கலைநகர் மற்றும் அண்ணாமலநகர் ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் சுரங்கப்பாதை மீது ஏறி ரெயில்வே தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர்.