அட இந்த காலத்திலுமா இப்படி இருப்பாங்க…..? சினிமா வாய்ப்பு வழங்குவதாக தெரிவித்தர்களை நம்பி பணத்தை இழந்த நபர்கள் காவல் நிலையத்தில் புகார்…..!

சென்னை டி நகர் பிரகாசம் சாலையில் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்று இருக்கிறது அந்த நிறுவனத்தின் பெயரில் சமீபத்தில் விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில் சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வம் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம், வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.


இதனை நம்பி பல இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் உள்ளிட்டோர் விண்ணப்பம் செய்து இருந்தனர். அவர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடியாக பறிக்கப்பட்டுள்ளது இந்த விளம்பரத்தை நம்பி துணை நடிகர்கள் நடிகைகள் உள்ளிட்ட வரும் அடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு விண்ணப்பம் செய்து பணத்தை இழந்ததாக சொல்லப்படுகிறது. இத்தகைய நிலையில்தான் பணத்தை கொடுத்து ஏமாற்றம் அடைந்தவர்கள் டி நகர் இருக்கின்ற தயாரிப்பு நிறுவனத்திற்கு நேரில் சென்று சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டுள்ளனர்.

அப்போது தான் தங்களுடைய நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி யாரோ பணமோசடி செய்திருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரிய வந்துள்ளது. இது குறித்து தயாரிப்பு நிறுவனம் சார்பாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் வழங்கப்பட்டது. அதன்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Post

செஞ்சி வாரச் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம் - எத்தனை கோடிகள் தெரியுமா?

Fri Jun 23 , 2023
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வாரச் சந்தை நடைபெறுவது வழக்கம். மிகவும் பிரசித்தி பெற்றது செஞ்சி ஆட்டுச் சந்தைக்கு சேலம், தர்மபுரி, வேலூர்,ஆம்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுவை, பெங்களுர் போன்ற மாநிலங்களில் இருந்தும் இங்கு நடைபெறும் சந்தையில் வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் செல்வர். இந்நிலையில், வரும் 29-06-23 தேதி பக்ரீத் பண்டிகை வருவதை முன்னிட்டு கூடுதலான ஆடுகள் விற்பனையாகி வருகிறது. இன்று செஞ்சி வாரச் சந்தையில் ஆடுகள் […]
விவசாயிகளே..!! ஆடுகளை வைத்து இப்படியும் லட்சங்களை சம்பாதிக்கலாம்..!! சூப்பர் ஐடியா..!!

You May Like