தேர்தல் களத்தில் முதல்வர் விஜய்..!! 2 நாட்கள் சூறாவளி பிரசாரம்..!! வெளியானது பயணத் திட்டம்..!!

vijay tvk

தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளரை ஆதரித்துத் தமிழக முதல்வர் விஜய் 2 நாட்கள் தீவிரப் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.


இவ்விரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி தொடங்கி 16-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் அக்டோபர் 9-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இக்களத்தில் தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி என 5 முனைப் போட்டி தீவிரமடைந்துள்ளது.

தவெக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவும் வேட்பாளர்களாகக் களம் காண்கின்றனர். இந்நிலையில், கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய முதல்வர் விஜய் நேரடியாக களமிறங்கி வாக்கு சேகரிக்க திட்டமிட்டுள்ளார்.

அதன்படி, மதுராந்தகம் தொகுதியில் வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி அச்சரப்பாக்கத்தில் நடைபெறும் பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் உரையாற்றுகிறார். தொடர்ந்து, அக்டோபர் 2-ஆம் தேதி மதுராந்தகம் தொகுதி முழுவதும் திறந்தநிலை வாகனத்தில் சென்றவாறு பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ஓட்டுக்கு ரூ.10,000..! திமுகவுக்கு டெபாசிட் காலி..! இரட்டை இலையும் விசிலும் ஒன்னு தான்..! எடப்பாடிக்கு அமைச்சர் ஆதவ் சவால்..!

You May Like