உலக சுகாதார நிறுவனத்தை மதிக்காத சீனா… ஒரு மாதத்தில் 60,000 பேர் உயிரிழப்பு…!

சீனாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா பாதிப்பால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 60 ஆயிரம் பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.


இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீன தேசிய சுகாதார ஆணையத்தின் கீழ் இயங்கும் சுகாதார நிர்வாகப் பிரிவின் தலைவர் ஜியாவோ யாஹூ, கடந்த டிசம்பர் 8-ம் தேதி முதல் இம்மாதம் 12-ம் தேதி வரை கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்து 938 என தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மட்டுமே என்பதால் கொரோனா பெருந்தொற்றால் கடந்த ஒரு மாதத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதை விட கூடுதலாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. சீனா உண்மையான விவரங்களை வெளியிட வேண்டும் என்றும் அது உலக சுகாதாரத்திற்கு மிகவும் முக்கியம் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியது. ஆனால் இதுவரை சீனா அதனை சற்றும் பொருட்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser3

Next Post

வேர்க்கடலையை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? - முழு விளக்கம்…

Sat Jan 14 , 2023
வேர்க்கடலை நாம் தனியாக சாப்பிட நினைக்கும் பொருள் அல்ல இது.. அதை நண்பர்களுடனும் உறவினர்களுடனும் சாப்பிட்டுக்கொண்டே நேரத்தைச் செலவிடும் போது கிடைக்கும் மகிழ்ச்சி விவரிக்க முடியாதது. ஆனால் வேர்கடலையில் நன்மைகள் உள்ள நிலையில் அதை யாரெல்லாம் எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதை தற்போது பார்க்கலாம்… வேர்க்கடலையை யார் சாப்பிடக்கூடாது? : நீங்கள் அதிக எடை கொண்டவராக இருந்தால், வேர்க்கடலையில் கலோரிகள் அதிகம் இருப்பதால் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இது உங்கள் எடையை […]
peanuts

You May Like