விஜய் தொலைக்காட்சியில் நடைபெறும் பல பிரபலங்கள் நிஜ வாழ்விலும் ஜோடி சேர்ந்த வரலாறு அடுத்தடுத்து நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த நிகழ்வானது முதன் முதலில் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்த ஜோடிகளில் தொடங்கி தற்போது வரையில் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், சில ஆண்டுகளுக்கு முன்னர் ராஜா, ராணி என்ற தொடரில் நடித்த சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா உள்ளிட்ட இருவரும் அந்த தொடரை நடித்துக் கொண்டிருக்கும் போதே காதலித்து வந்தனர்.
அதன் பின்னர் அந்த நெடுந்தொடரை நடித்து முடித்துவிட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது அந்த தம்பதிகளுக்கு இரு குழந்தைகள் இருக்கின்றனர்.
தற்போது சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் தொடரிலும், ஆல்யா மானசா இனியா என்ற தொடரிலும் நடித்து வருகிறார்கள். இந்த இரு தொடர்களும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சூழ்நிலையில்தான் சஞ்சீவ் ஆல்யா மானசா மிகக்குறுகிய காலகட்டத்திலேயே தன்னுடைய உடல் எடையை குறைத்து இருக்கிறார். ஆகவே அவருக்கு என்னுடைய பரிசு என்று ஒரு கைப்பையை பரிசளித்தார்.
இந்த நிலையில் தற்சமயம் புத்தாண்டை கொண்டாடுவதற்காக துபாய் நாட்டிற்கு சென்றுள்ள இந்த ஜோடி, புத்தாண்டை அங்கு கொண்டாட முடிவு செய்திருக்கிறார்கள். இந்த நிலையில் தான் ஆல்யா மானசா தன்னுடைய கணவருக்கு விலையுயர்ந்த சூட்கேஸ் ஒன்றை பரிசளித்துள்ளார். அதனை நடிகர் சஞ்சீவும் புகைப்படம் எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். ரசிகர்கள் இந்த பிராண்ட் மிகவும் சூப்பராக இருக்கும் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.