fbpx

பிரபல தயாரிப்பாளரின் மகளை கரம்பிடிக்கும் அசோக் செல்வன்..!! அவர் யார் தெரியுமா..?

சூது கவ்வும் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் அசோக் செல்வன். இதையடுத்து பீட்சா 2 வில்லா படம் மூலம் ஹீரோவாக காலடி எடுத்து வைத்தார். இதையடுத்து தெகிடி, கூட்டத்தில் ஒருத்தன், ஓ மை கடவுளே, மனமதலீலை, சில நேரங்களில் சில மனிதர்கள் என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்தார். கடந்தாண்டில் அதிக தமிழ் படங்களில் நடித்த ஹீரோவும் அசோக் செல்வன் தான். தற்போது அசோக் செல்வன் கைவசம் ஏராளமான படங்கள் உள்ளன.

குறிப்பாக பா.ரஞ்சித் தயாரிக்கும் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார் அசோக். இப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து தயாராகி வருகிறது. இதில் அவருடன் சாந்தனுவும் மற்றொரு ஹீரோவாக நடிக்கிறார். இதுதவிர நெஞ்சமெல்லாம் காதல் என்கிற படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இப்படி பிஸியான நடிகராக வலம் வரும் அவருக்கு, விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் அசோக் செல்வனுக்கு தற்போது 33 வயது ஆகிறது. அவர் பிரபல தயாரிப்பாளரின் மகளை காதலித்து வருகிறாராம். இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துவிட்டதால், விரைவில் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அசோக் செல்வன் காதலிக்கும் அந்த பெண் தமிழ் சினிமாவில் சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். அந்த பெண் யார் என்பதை நெட்டிசன்கள் வலைவீசி தேடி வருகின்றனர்.

Chella

Next Post

’இந்த அறிவிப்பை யாரும் நம்பாதீங்க’..!! ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட புதிய அறிவிப்பு..!!

Mon Mar 20 , 2023
காலியாக உள்ள 4,136 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்து வெளியான தகவல் தவறானது என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், வட்டார கல்வி […]

You May Like