fbpx

முடிந்தது சிகிச்சை உடனே வலைதளத்தில் பதிவிட்ட விஜய்ஆண்டனி….! என்ன சொல்லியிருக்கார்….?

நடிகர் மற்றும் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும், அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது பிச்சைக்காரன் திரைப்படம் தான்.

ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த திரைப்பட த்தின் 2வது பாகம் எப்போது வரும் என்று பிச்சைக்காரன் திரைப்படத்தின் முதல் பாகம் வந்த சமயத்திலேயே ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கி விட்டனர்.

அதோடு, நடிகர், இசையமைப்பாளர் என்ற அடையாளத்தை கடந்து இந்த திரைப்படத்தின் மூலமாக விஜய் ஆண்டனி இயக்குனராகவும் அறிமுகமாகி இருக்கிறார். இந்த திரைப்படத்தின் படபிடிப்பு நடைபெற்று வந்தது அப்போது எதிர்பாராத விதமாக விஜய் ஆண்டனிக்கு விபத்து உண்டானது.

இவருக்கு முதல் கட்ட சிகிச்சை மலேசியாவில் வழங்கப்பட்டது. இதன்பிறகு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சமீபத்தில் விஜய் ஆண்டனிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. விஜய் ஆண்டனி அவருடைய உடல்நலம் தொடர்பாக ட்வீட் ஒன்றை செய்திருக்கிறார்.

அந்த பதிவில் அன்பு இதயங்களே நான் 90% குணமடைந்து விட்டேன். உடைந்த தாடை மற்றும் மூக்கு தற்சமயம் ஒன்று சேர்ந்து விட்டது என்னவென்று தெரியவில்லை, நான் முன்பை விட தற்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதற்கு காரணம் நீங்கள் தான் இன்று முதல் பிச்சைக்காரன் திரைப்படத்தின் வேலையை ஆரம்பிக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

Next Post

நடிகர் விஜய்க்கு விவாகரத்து ஆகிவிட்டதா….? எங்கே சென்றார் சங்கீதா….?

Thu Feb 2 , 2023
திரைத்துறையை பொறுத்தவரையில் பிரபலமான நடிகர், நடிகைகளாக இருந்தால் நிச்சயமாக இது போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியது வரலாம்.இதில் யாரும் விதிவிலக்கல்ல, மிகப் பெரிய ஜாம்பவான்களும் கூட இது போன்ற சிக்கல்களை சந்தித்து இருக்கிறார்கள். அதேபோன்று தற்போது தமிழ் திரையுலகின் மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்ந்துவரும் ஒரு நடிகருக்கு ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.நடிகர் விஜய்க்கும், அவருடைய மனைவி சங்கீதாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. என்றும் ஆகவே சங்கீதா வெளிநாட்டில் இருக்கின்ற தன்னுடைய தந்தையை […]
மனைவியுடன் ’வாரிசு’ படம் பார்க்க வந்த விஜய்..!! படக்குழுவினர் மீது கோபமடைந்ததால் பரபரப்பு..!!

You May Like