தமிழ் திரை உலகில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, பின்னாளில் நடிகராக மாறினார். இதுவரையில் பல்வேறு திரைப்படங்களில் அவர் நடித்திருக்கிறார். ஆனால் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது பிச்சைக்காரன் திரைப்படம் தான்.தன்னுடைய தாய்க்காக அனைத்தையும் இழந்து அவர் ஒரு விடயத்தை செய்வார். அந்த விடயத்தாலேயே அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டாணது.
உடனடியாக பொதுமக்கள் இந்த திரைப்படத்தின் 2ம் பாகம் எப்போது என்று கேட்கத் தொடங்கினார். பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது மலேசியாவில் சமீபத்தில் இந்த படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அங்கே விஜய் ஆண்டனிக்கு ஒரு பயங்கர விபத்து உண்டானது. இந்த விபத்தில் அவருக்கு தாடை மற்றும் மூக்கில் பயங்கர காயம் உண்டானது. இதன் காரணமாக, அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
பிரபல மருத்துவமனையில் அவருக்கு தாழை மற்றும் மூக்கில் காயம் ஏற்பட்டிருப்பதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.சிகிச்சைக்கு பிறகு அவர் நலமுடன் இருப்பதாகவும், மிக விரைவில் தங்களை சந்திக்கிறேன் என்று விஜய் ஆண்டனி மருத்துவமனையில் இருந்து புகைப்படத்துடன் கூடிய ட்விட்டை செய்திருக்கிறார்.