திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாலசமுத்திரம் என்ற கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் வசித்து வருகின்றார்கள். பாலசமுத்திரம் கிராமத்தில் இஸ்லாமிய மக்கள் அடக்கம் செய்வதற்கு சொந்தமாக 5 ஏக்கர் நிலத்தை அடக்கஸ்தலமாக பயன்படுத்துகிறார்கள்.
இந்த அடக்கஸ்தலத்திற்கு அருகில் வசித்து வரும் மாற்று சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இஸ்லாமிய மக்கள் அடக்க ஸ்தலம் என்ற பெயரில் அரசாங்க நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பதாக தகராறில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அடக்கஸ்தலம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆகவே வஃபு வாரிய வழக்கறிஞர்கள் அடக்கஸ்தலத்தை பார்வையிட்டு அளவீடு செய்ய முயற்சித்தார்கள். எது குறித்து தகவல் அறிந்த அந்த மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் அந்தப் பகுதியில் ஒன்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆகவே பாலசமுத்திரத்தில் பழனி நகர டி எஸ் பி சிவசக்தி தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டார்கள். அதோடு பொதுமக்கள் கலைந்து செல்ல வேண்டும் என்று காவல்துறையினர் மூலமாக அறிவுறுத்தல் வெளியிடப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருப்பதால் இதை அளவீடு செய்யக்கூடாது என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆகவே வஃபு வாரிய வழக்கறிஞர்கள் அடக்கஸ்தலம் அமைந்திருக்கின்ற பகுதியை பார்வையிட்டு சென்றார்கள் பாலசமுத்திரத்தில் அடக்கஸ்தலம் குறித்த பிரச்சனையில் இருதரப்பினர் குவிந்ததால் பரபரப்பு உண்டானது.