இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல்….! காவல் துறையினர் குவிக்கப்பட்டதால் பழனியில் பரபரப்பு…..!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாலசமுத்திரம் என்ற கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் வசித்து வருகின்றார்கள். பாலசமுத்திரம் கிராமத்தில் இஸ்லாமிய மக்கள் அடக்கம் செய்வதற்கு சொந்தமாக 5 ஏக்கர் நிலத்தை அடக்கஸ்தலமாக பயன்படுத்துகிறார்கள்.


இந்த அடக்கஸ்தலத்திற்கு அருகில் வசித்து வரும் மாற்று சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இஸ்லாமிய மக்கள் அடக்க ஸ்தலம் என்ற பெயரில் அரசாங்க நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பதாக தகராறில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அடக்கஸ்தலம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆகவே வஃபு வாரிய வழக்கறிஞர்கள் அடக்கஸ்தலத்தை பார்வையிட்டு அளவீடு செய்ய முயற்சித்தார்கள். எது குறித்து தகவல் அறிந்த அந்த மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் அந்தப் பகுதியில் ஒன்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆகவே பாலசமுத்திரத்தில் பழனி நகர டி எஸ் பி சிவசக்தி தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டார்கள். அதோடு பொதுமக்கள் கலைந்து செல்ல வேண்டும் என்று காவல்துறையினர் மூலமாக அறிவுறுத்தல் வெளியிடப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருப்பதால் இதை அளவீடு செய்யக்கூடாது என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆகவே வஃபு வாரிய வழக்கறிஞர்கள் அடக்கஸ்தலம் அமைந்திருக்கின்ற பகுதியை பார்வையிட்டு சென்றார்கள் பாலசமுத்திரத்தில் அடக்கஸ்தலம் குறித்த பிரச்சனையில் இருதரப்பினர் குவிந்ததால் பரபரப்பு உண்டானது.

Next Post

முக்கிய கட்சி பிரபாகர் வெட்டிப்படுகொலை……! காவல் துறையினர் குவிக்கப்பட்டதால் பரபரப்பு……!

Sun Mar 12 , 2023
கடந்த 2021 ஆம் ஆண்டு நீடாமங்கலம் கடைவீதியில் தலை துண்டிக்கப்பட்டு சிபிஐ கட்சியை சேர்ந்த ஒன்றிய செயலாளர் நடேசதமிழார்வன் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு பழிவாங்கும் விதத்தில், திருவாரூர் அருகே இருக்கின்ற கமலாபுரம் என்ற பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த வளரும் தமிழகம் கட்சியின் பிரமுகர் ராஜ்குமாரின் காரின் மீது எதிரில் வந்த ஸ்கார்பியோ கார் மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு 8 பேர் கொண்ட மர்மகும்பல் பூவனூர் ராஜகுமாரை வெட்டி […]
MURDER 2

You May Like