திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கோயிலுக்குள் உள்ள உண்டியலில் தனது தரிசனம் முடிந்த பிறகு காணிக்கையை செலுத்தி வருகின்றனர்.
தேவஸ்தானம் (கோவில்) கடந்த எட்டு மாதங்களில் பக்தர்களிடமிருந்து பெறப்பட்ட உண்டியல் கணக்கெடுப்பில் மொத்தம் ரூ1000 கோடி கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2021-22 ஆம் ஆண்டில், கொரோனா நெருக்கடியின் போது முந்தைய ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட உண்டியல் வசூலை ஒப்பிடுகையில், ரூ 933 கோடி ரூபாயாக சரிவை சந்தித்துள்ளது.
தற்போது கடந்த 8 மாதங்கள் கணக்கெடுப்பில் கொரோனா காலத்தில் முந்தைய காலத்தை ஒப்பிடுகையில் 32 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதனை கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.