தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வணிக வரித்துறை திடீர் சோதனை: வரி ஏய்ப்பு செய்த வணிகர்களிடம் ரூ.1 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது
இது தொடர்பாக வணிகவரித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பண்டிகை காலங்களில் வணிகர்கள் பட்டியலின்றி வணிகம் செய்கின்றமை மற்றும் வரி ஏய்ப்பு செய்தமை எனும் புகார்களை தொடர்ந்த சென்னை (நுண்ணறிவு -1) கோட்ட அலுவலர்களால் செளகார்பேட்டை, தி.நகர் மற்றும் இதர இடங்களில் இயங்கும் 52 வணிகதலங்களில், 17.10.2022 மற்றும் 18.10.2022 ஆகிய தினங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆய்வின்போது, வரி ஏய்ப்பு செய்தமைக்காகவும், உள்ளீட்டு வரி தவறாக பயன்படுத்தியமைக்காகவும் 25 வணிகர்களிடமிருந்து (4 இரும்பு,4 மின்சாதனம், 3 தங்கநகை, 8 வேதிப்பொருட்கள் மற்றும் இதரவணிகர்கள்) ரூ.1.01 கோடி வசூல் செய்யப்பட்டது.
இந்த ஆய்வுகளைத் தொடர்ந்து, மேலும் சில வணிகர்களின் கணக்குகளை ஆய்வு செய்து, நோட்டீஸ் வழங்கப்பட்டது, மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது..