தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திடீர் சோதனை…! கோடி கணக்கில் கைப்பற்றப்பட்ட பணம்…! எவ்வளவு தெரியுமா…?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வணிக வரித்துறை திடீர் சோதனை: வரி ஏய்ப்பு செய்த வணிகர்களிடம் ரூ.1 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது

இது தொடர்பாக வணிகவரித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பண்டிகை காலங்களில்‌ வணிகர்கள்‌ பட்டியலின்றி வணிகம்‌ செய்கின்றமை மற்றும்‌ வரி ஏய்ப்பு செய்தமை எனும்‌ புகார்களை தொடர்ந்த சென்னை (நுண்ணறிவு -1) கோட்ட அலுவலர்களால்‌ செளகார்பேட்டை, தி.நகர்‌ மற்றும்‌ இதர இடங்களில்‌ இயங்கும்‌ 52 வணிகதலங்களில்‌, 17.10.2022 மற்றும்‌ 18.10.2022 ஆகிய தினங்களில்‌ திடீர்‌ ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


அந்த ஆய்வின்‌போது, வரி ஏய்ப்பு செய்தமைக்காகவும்‌, உள்ளீட்டு வரி தவறாக பயன்படுத்தியமைக்காகவும்‌ 25 வணிகர்களிடமிருந்து (4 இரும்பு,4 மின்சாதனம்‌, 3 தங்கநகை, 8 வேதிப்பொருட்கள்‌ மற்றும்‌ இதரவணிகர்கள்‌) ரூ.1.01 கோடி வசூல்‌ செய்யப்பட்டது.

இந்த ஆய்வுகளைத்‌ தொடர்ந்து, மேலும்‌ சில வணிகர்களின்‌ கணக்குகளை ஆய்வு செய்து, நோட்டீஸ்‌ வழங்கப்பட்டது, மேல்‌ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது..

Vignesh

Next Post

ரெடியா இருங்க...! 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள்...! வெளியான முக்கிய அறிவிப்பு...!

Fri Oct 21 , 2022
தீபாவளி பண்டிகைக்காக வெளியூர் செல்பவர்களின் வசதிக்காக கடைசி நேர நேரடி பேருந்து முன்பதிவு தொடங்கி உள்ளது. நாடு முழுவதும் வரும் 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் வெளியூர்களில் வேலை பார்க்கும் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக, ரயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 16,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் […]
bus 1

You May Like