தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் சார்பில் போட்டி… மாணவர்களுக்கு ரூ.10,000 வரை பரிசுத்தொகை…!

tn Govt subcidy 2025

தருமபுரி மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2025-2026ஆம் ஆண்டில் 11, 12ஆம் வகுப்பில் பயிலும் பள்ளி/கல்லூரி மாணவர்களிடையே தமிழில் பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் 11, 12ஆம் வகுப்பில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் 14.10.2025 அன்றும், தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் 15.10.2025 அன்றும் நடைபெறவுள்ளன.


கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு தலா முதல் பரிசாக ரூ.10000/- இரண்டாம் பரிசாக ரூ.7000/- மூன்றாம் பரிசாக ரூ.5000/- என வழங்கப்படும். ஒரு பள்ளி/கல்லூரியிலிருந்து ஒரு போட்டிக்கு ஒரு மாணவர் வீதம் மூன்று மாணவர்களை மட்டும் தெரிவு செய்து உரிய படிவத்துடன் மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர்/கல்லூரி முதல்வர் அனுப்ப வேண்டும். மாணவர்கள் போட்டி நாளன்று காலை 9.00 மணிக்குள் வருகையைப் பதிவு செய்திடல் வேண்டும்.

போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர் கல்லூரி முதல்வரிடமிருந்து உரிய படிவத்தை நிறைவு செய்து போட்டி தொடங்கும் முன்பு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் கொடுத்திடல் வேண்டும். தருமபுரி மாவட்டத்திலுள்ள அரசு, தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11, 12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணாக்கர்கள் / அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகள், கலைக் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்று பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இயற்கை பேரழிவு வார்னிங்!. இந்தியாவில் தண்ணீரே இருக்காது!. உலக அளவில் பெரிய தாக்கம் ஏற்படும்!. பாபா வங்க கணிப்பு!.

Fri Oct 3 , 2025
பார்வையற்ற தீர்க்கதரிசியான பாபா வங்கா, தான் இறப்பதற்கு முன்பு 5079 ஆம் ஆண்டு வரை கணிப்புகளைச் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்போது, ​​2026 ஆம் ஆண்டிற்கான அவரது கணிப்புகளைப் பற்றி அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. அவரது திகிலூட்டும் மற்றும் சுவாரஸ்யமான தீர்க்கதரிசனங்கள் உலகளாவிய ஈர்ப்பாக மாறியுள்ளன. 1996 இல் அவர் இறப்பதற்கு முன்பு, 5079 ஆம் ஆண்டுக்கான எதிர்காலத்தை அவர் கணித்திருந்தார், இருப்பினும் எந்த எழுத்துப்பூர்வ ஆவணங்களும் இல்லை. இயற்கை […]
baba vanga new 11zon

You May Like