கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் நோக்கி செல்லும் காவிரி விரைவு ரயில் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் ஆம்பூர் அருகே வந்து கொண்டிருந்தது ஆம்பூரை அடுத்துள்ள வீரர் கோவில் அருகே வந்தபோது பாறாங்கல் மீது மோதியது போல ஒரு பயங்கர சட்டம் கேட்டது. உறங்கிக் கொண்டிருந்த பயணிகள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு எழுந்து கூச்சலிட்டனர். ரயிலின் ஓட்டுநர் உடனடியாக ரயிலின் வேகத்தை குறைத்து பச்சகுப்பம் ரயில் நிலையத்தில் நிறுத்தினார்.
மேலும் இது தொடர்பாக ஜோலார்பேட்டை, காட்பாடி ரயில் நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஜோலார்பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளர் இளவரசி தலைமையிலான காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
தண்டவாளத்தின் மீது மர்ம நபர்கள் கான்கிரீட் கல் ஒன்றை வைத்து இருக்கிறார்கள். அதன் மீது ரயில் இன்ஜின் மோதியதில் அந்த கல் சிதறி தந்த காலத்தில் இருந்து விலகி கீழே விழுந்து இருக்கிறது என்று தெரிய வந்தது. அந்த விசாரணையில் வேற அவர் கோவில் அருகே இருக்கின்ற கடைகள் மற்றும் கோவில் பகுதிகளில் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் எந்த விதமான தகவலும் கிடைக்கவில்லை. ரயிலை கவிழ்க்க சதித்திட்டத்துடன் தண்டவாளத்தில் கல் வைக்கப்பட்டதா? என்ற விதத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
சென்னையிலிருந்து மோப்பநாய் ஜான்சியுடன் வந்த ரயில்வே புலனாய்வு குழுவினரும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சேலம் உட்கோட்டை ரயில்வே பாதுகாப்பு படை டிஎஸ்பி பெரியசாமி தலைமையிலான 10 காவல்துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு நடுவே காவிரி விரைவு ரயில் அரை மணி நேரத்திற்கு பிறகு புறப்பட்டு சென்றது. இந்த வழித்தடத்தில் திருவனந்தபுரம் விரைவு ரயில் உள்ளிட்ட மூன்று ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டனர்.