மேற்குவங்க மாநிலத்தில் மருமகனை கொலை செய்த அத்தை, உடலை துண்டு துண்டாக வெட்டி சுவரில் சிமெண்ட் கொண்டு மூடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்தில் நடந்தது. மால்டாவைச் சேர்ந்த மௌமிதா ஹசன் நதாப் என்ற பெண் தனது மருமகன் சதாம் நதாப்புடன் திருமணத்திற்குப் புறம்பான உறவில் ஈடுபட்டுள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த உறவு பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்த நிலையில், சமீப காலமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகறாரு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மே 18 அன்று, சதாம் காணாமல் போனதாக குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் மௌமிதாவிடம் நடத்திய விசாரித்ததில், பல உண்மை நிலவரம் வெளிச்சத்துக்கு வந்தது. சதாமை கொலை செய்து, உடலை மூன்று துண்டுகளாக வெட்டி, சிமெண்டில் போட்டு, தனது வீட்டுச் சுவர்களில் மறைத்து வைத்ததாக மௌமிதா ஒப்புக்கொண்டார். இருவரும் உல்லாசமாக இருந்த போது எடுத்த அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவதாக மருமகன் மிரட்டியதால் கோபத்தில் கொலை செய்ததாக அந்த பெண் ஒப்புக்கொண்டார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டனர். இதற்கிடையில், சதாம் ஒரு தொழிலாளர் ஒப்பந்ததாரராகப் பணிபுரிந்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பரிவர்த்தனைகளைக் கையாண்டார். அவரிடம் ஏராளமான பணம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பணப் பிரச்சினைதான் கொலைக்கு முக்கியக் காரணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இருப்பினும், தன்னை மிரட்டியதால் தான் அவரைக் கொன்றதாக மௌமிதா கூறியிருந்தாலும், நிதி பரிவர்த்தனைகளுக்குப் பின்னால் உள்ள ரகசியங்களைக் கண்டறிய போலீசார் இன்னும் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையில் அவருக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் மௌமிதாவின் கணவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Read more: 18 ஆண்டுகளுக்குப் பிறகு RCB சாம்பியன்.. விஜய் மல்லையாவின் வாழ்த்து பதிவுக்கு SBI கிண்டல் கமெண்ட்..!!