“ தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு.. ஆனால்..” அமைச்சர் மா. சுப்பிரமனியன் தகவல்..

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்..

இந்தியாவில் H3N2 வைரஸ் காய்ச்சல் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.. காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி, உடல் வலி என கொரோனா போன்ற அறிகுறிகளுடன் இந்த வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது.. இந்த காய்ச்சல் வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.. எனினும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர், சுவாச நோய் உள்ளவர்கள், இணை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது..


இந்நிலையில் தமிழகத்தில் சமீபகாலமாக H3N2 காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதால், மாநிலம் முழுவதும் இன்று 1000 சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்று வருகிறது.. சென்னை சைதாப்பேட்டையில் காய்ச்சல் தடுப்பு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.. அப்போது பேசிய அவர் “ இந்த முகாம் மூலம் தமிழகத்தில் எத்தனை பேர் H3N2 காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவரும்.. பின்னர் காய்ச்சலில் இருந்து குணமடைய உரிய சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமூக பரவல் அடையும் முன்பே இதனை கட்டுப்படுத்த வேண்டும். பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்..

தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஒரு மாதத்துக்கு முன் 2ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 25ஆக அதிகரித்துள்ளது. ஒமைக்ரான் வகை கொரோனா அதிகரித்தாலும் அதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை. எனவே பொதுமக்கள் பதட்டம் கொள்ள தேவையில்லை…முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி ஆகியவற்றை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.. காய்ச்சல் பாதித்தவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டால் மற்றவர்களுக்கு பரவாது, கொரோனா தடுப்பு வழிகளை பின்பற்றினாலே H3N2 வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ளலாம் ..” என்று தெரிவித்தார்

1newsnationuser1

Next Post

விரைவில் தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திரமோடி…..! பரபரப்பில் தமிழக அரசியல் களம்…..!

Fri Mar 10 , 2023
தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் இருந்தாலும் அவ்வப்போது அந்த கட்சிகளுக்கு இடையே பனிப்போர் வெடித்து வருகிறது. அதேபோன்று தற்போதும் அந்த கட்சிகளுக்கு இடையில் பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. இந்த நிலையில் தான் ரயில்வே திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் சாலை திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி வரும் 23ஆம் தேதி தமிழகத்திற்கு வர உள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இருக்கின்றன என்று […]
PM Modi Death Threat

You May Like