தமிழ்நாட்டில் தினசரி நோய் தொற்று பாதிப்பு மெல்ல, மெல்ல அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒரே நாளில் 139 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 777 பேருக்கு நோய் தொற்று சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைகளில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது என்று கூறப்படுகிறது.
மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ மனைகளுக்கு வருகை தரும் நோயாளிகள், அவர்களுடைய உறவினர்கள் உள்ளிட்டோர் நிச்சயமாக முக கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல் அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.