Crime | ”என் மனைவியுடன் தொடர்பா”..? நண்பனின் கை, கால்களை கட்டிப் போட்டு கொடூர தாக்குதல்..!!

மனைவியின் கள்ளக்காதல் குறித்த சந்தேகத்தில் நண்பனின் கை, கால்களை கட்டிப் போட்டு அடித்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சௌந்தரராஜன் (42). இவரது நெருங்கிய நண்பர் ஐயப்பன். இருவரும் குடும்ப நண்பர்கள். சம்பவத்தன்று ஐயப்பன் குடிபோதையில் முதலில் வீட்டில் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். பிறகு அங்கிருந்து கிளம்பி, சௌந்தரராஜன் வீட்டிற்கு சென்று “உனக்கும் என் மனைவிக்கும் என்ன தொடர்பு?” என கேட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சௌந்தரராஜனிடம் கேள்வி கேட்டு தகராறு செய்துள்ளார் ஐயப்பன். பின்னர் நேற்று இரவு உளுந்தூர்பேட்டைக்கு மளிகை பொருட்கள் வாங்க வந்த சௌந்தரராஜனை வழிமறித்து மீண்டும் அவரிடம் தகராறு செய்தார். உறவினர்களுடன் சேர்ந்து, சௌந்தரராஜனின் கை, கால்களை கட்டி, கடுமையாக தாக்கினார். பின்னர், தாக்குதலின் போது, அவர் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சௌந்தரராஜனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : Crime | ”புருஷனை விட்டு எவன் கூட பேசிட்டு இருக்க”..!! அக்காவை சரமாரியாக வெட்டிக்கொன்ற தம்பி..!!

Chella

Next Post

OPS | அதிமுக சின்னம், கொடியை பயன்படுத்த ஓபிஎஸுக்கு தடை..!! ஐகோர்ட் தீர்ப்பால் குஷியில் எடப்பாடி..!!

Mon Mar 18 , 2024
அதிமுக சின்னம் மற்றும் கொடியை ஓபிஎஸ் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதிமுக இரட்டை இலை சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக்கோரி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை […]

You May Like