தனியார் வங்கியில் டிகிரி முடித்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு…! விண்ணப்பிக்க 30-ம் தேதி கடைசி நாள்… முழு விவரம்

கத்தோலிக்க சிரியன் வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Regional Sales Manager – Gold Loan பணிகளுக்கு என மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பட்டம் முடித்தவராக இருக்க வேண்டும்.. மேலும் பணியில் முன் அனுபவம் 10 முதல் 20 ஆண்டு இருக்க வேண்டும்..


தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்வம் உள்ள நபர்கள் 30.11.2022 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

Vignesh

Next Post

சூப்பர் நியூஸ்..!! வீட்டுமனைப் பட்டா குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Thu Nov 17 , 2022
முன்னுரிமை பட்டியலில் மாற்றுத் திறனாளிகளை சேர்க்கவும் அடிப்படை தகுதிகளாக நிலமற்றவர்கள் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி சட்டபேரவையில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் கட்ட வருவாய்த் துறை மூலம் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என்ற அறிவிப்பை […]
Registration

You May Like