அரபிக் கடல் பகுதியில் ஏற்பட்ட பிபர்ஜாய் புயல் குஜராத்தின் ஜக்காவ் துறைமுகம் அருகே இன்று மாலை கரையை கடக்கிறது. இதனால் கடலோர பகுதிகளில் மிக பலத்த மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தான் கர்நாடக மாநிலத்தின் கடலோர மாவட்டங்களான உடுப்பி, தட்சிண கன்னடா உத்தர கன்னடா போன்ற 3 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்த புயலின் காரணமாக, ஜூன் மாதம் 19 ஆம் தேதி வரையில் கடலில் உயர் அலைகள் உண்டாகும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே கடலோர பகுதிகளில் இருக்கின்ற மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு வருகிறார்கள் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை கேட்டு அறிய ஹெல்ப் லைன் எண்களும் வெளியிடப்பட்டிருக்கிறது.
கடலோர காவலர்கள் கடற்கரையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்கள். சூறைக்காற்று இடி மின்னலுடன் மழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் யாரும் கடலுக்கு அருகே செல்ல வேண்டாம் எனவும் அவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
பெங்களூரு கிராமப்புறம் சித்ர துர்கா கோலார் மாண்டியா ராமநகர் மற்றும் துமாகுருவின் தெற்கு உள்துறை மாவட்டங்களும் பலத்த மழைக்கு ஆளாகலாம். அதே போல பெங்களூரு கிராமப்புறம், சித்ரதுர்கா,கோலார்,மாண்டியா, ராமநகர், சிக்காபல்லபூர், ஹசான், குடகு மற்றும் மைசூர் போன்ற மாவட்டங்கள் மிதமான மழைக்கு ஆளாகலாம் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.