ஒரு வாரத்துல மகள் கல்யாணம்.. நகை பணத்துடன் எஸ்கேப் ஆன தந்தை.. கள்ளக்காதலியுடன் லாட்ஜில் உல்லாசம்..!! ஸ்கெட் போட்டு பிடித்த போலீஸ்..

Sex 2025 1

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சுரேந்திரன் (50). கச்சி அருகே உள்ள குன்னத்துநாடு கிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். வியாபாரியான இவரது மகளின் திருமணம் இன்னும் ஒரு வாரத்தில் நடைபெற இருந்தது. அதற்காக 15 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் சேர்த்து வைத்திருந்தனர்.


இந்த நிலையில் சுரேந்திரன் திடீரென காணாமல் போய்விட்டார். வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணமும் காணாமல் போனது. மொத்தம் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் காணாமல் போனதால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து எர்ணாகுளம் புறநகர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையில், அவரது செல்போன் பல நாட்கள் சுவிட்ச் ஆஃப் நிலையில் இருந்தது.

பின்னர் இரண்டு நாட்களுக்கு முன்பு சுரேந்திரன் மகளுடன் தொடர்பு கொண்டு, “நான் நலமாக இருக்கிறேன், என்னை தேட வேண்டாம்” என்று கூறினார். மகள் அழுதபடியே திருமணத்திற்கு வருமாறு கேட்டுள்ளார். அப்போது அவர் நான் வருவதாக தெரிவித்துள்ளார். சுரேந்தரின் செல்போன் எண்ணை டிராக் செய்த போலீசார், சுரேந்திரனின் இருப்பிடத்தை கண்டறிந்தனர்.

திருவனந்தபுரம் அருகே உள்ள தனியார் விடுதி-வில் அவர் ஒரு பெண்ணுடன் தங்கி இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அந்த பெண் அவரது கள்ளக்காதலி என உறுதி செய்யப்பட்டது. பின்னர் போலீசார் சுரேந்திரனை கைது செய்து, 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.2.70 லட்சம் ரொக்கம் மீட்டனர். கள்ளக்காதலியை எச்சரித்த போலீசார் அவரை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

Read more: எச்சரிக்கை..!! மருத்துவர் பரிந்துரைத்த சளி மருந்தால் விபரீதம்..!! ஒன்றரை வயது குழந்தை துடிதுடித்து மரணம்..!! குமரியில் ஷாக்..!!

English Summary

Daughter’s wedding in a week.. Father escapes with jewelry and money.. Fun at the lodge with a prostitute..!

Next Post

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ரூ.8000 உதவித்தொகை...! ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்...!

Tue Oct 21 , 2025
அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை வழங்கும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாகச் சீரிளமைத் திறம் கொண்ட அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. முதுமைக்காலத்திலும் பொருள்வறுமை, தமிழ்த்தொண்டர் பெருமக்களைத் தாக்காவண்ணம் திங்கள்தோறும் உதவித்தொகை ரூ.7500/-மும், மருத்துவப்படி ரூ.500/உம் என மொத்தம் […]
stalin money

You May Like