டெல்லியில் காதலித்த பெண்ணை கொலை செய்து குளிர்சாதன பெட்டியில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்மேற்கு டெல்லியில் உள்ள மித்ரான் புறநகரில் உள்ள ‘தாபா’ உணவகம் ஒன்றின் குளிர்சாதன பெட்டியில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது, அவருடன் உறவில் இருந்ததாகக் கூறப்படும் ஒரு நபரை போலீஸார் கைது செய்தனர். சம்பவம் குறித்து கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் விக்ரம் சிங் கூறியதாவது: புறநகரில் உள்ள தாபாவில் பெண் ஒருவர் கொல்லப்பட்டு அவரது உடல் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக செவ்வாய்கிழமை காலை தகவல் கிடைத்தது.போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டனர்.
குற்றம் சாட்டப்பட்ட மித்ரான் பகுதியில் வசிக்கும் சாஹில் கஹ்லோட் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். தொடர்ந்து பேசிய அவர்; முதற்கட்ட விசாரணையில் சாஹில் கஹ்லோட் பிப்ரவரி 10 ஆம் தேதி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
அதனை கொல்லப்பட்ட பெண் எதிர்த்து உள்ளார். அதுமட்டுமின்றி காவல்துறைகள் வழக்கு தொடுப்பதாகவும் கூறி மிரட்டி உள்ளார் இதனால் ஆத்திரமடைந்த சாஹில் கஹ்லோட் அந்தப் பெண்ணை கொலை செய்து குளிர்சாதன பெட்டிக்குள் மறைத்து வைத்துள்ளார். இறந்த பெண் ஹரியானாவை சேர்ந்தவர் என்று காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.