தகாத வார்த்தை.. அவமானத்தில் உயிரை விட்ட திமுக பிரமுகர்.! கைதான பாஜக நிர்வாகி.!

தர்மபுரி மாவட்டத்தில் காரிமங்கலம் அருகே செட்டிப்பட்டி பகுதியில் கோவிந்தசாமி (48 வயது) என்பவர் திமுக கிளைச் செயலாளராக பதவி வகித்துள்ளார். அதே பகுதியில் பாஜக ஒன்றிய தலைவரான ராஜசேகர் என்பவருக்கு கோவிந்தசாமியுடன் முன் விரோதம் இருந்தது.


எனவே இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வரும். கடந்த செப்டம்பர் மாதம் இருபதாம் தேதி கோவிந்தசாமி தன்னுடைய சகோதரி வீட்டிற்கு முன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே சென்ற ராஜசேகர் கோவிந்தசாமியை மிகவும் தகாத வார்த்தைகளை கொண்டு திட்டினார்.

இதனால் மிகுந்த அவமானத்தில் இருந்த கோவிந்தசாமி தனது வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சைக்கு சென்று வீட்டில் இருந்து வந்த கோவிந்தசாமி உயிரிழந்து விட்டார்.

இது குறித்து கோவிந்தசாமியின் மகன் புவனேஷ் என்பவர் போலீசில் புகார் கொடுத்த நிலையில், தற்கொலைக்கு தூண்டியதாக கூறி பாஜக நிர்வாகி என ராஜசேகரை போலீசார் கைது செய்து தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.

1newsnationuser5

Next Post

உலக உணவு தினம் : பஞ்சத்தில் தவிக்குமா இந்தியா ?

Sun Oct 16 , 2022
மனிதர்களாகிய நாம் உயிர்வாழ உணவு இன்றியமையாத ஒன்று… அந்த உணவு உலக அளவில் மிகப்பெரியஅளவிலான வர்த்தகத்தை கொண்டுள்ளது. சத்தான உணவுக்காக நாம் என்ன வெல்லாம் செய்ய வேண்டி உள்ளது. விலைவாசி கூடும் நேரத்தில் அந்த உணவை நாம் பாதுகாக்க வேண்டும். பணம் இருப்பவர்கள் எவ்வளவு பணம் கொடுக்கின்றோம் என்பதை கணக்கில்வைத்துக் கொள்வதில்லை  கணக்கில்லாமல் எதை வேண்டுமானாலும் எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுத்து வாங்கத் தயாராகிவிட்டனர். இன்று பணம் இருக்கின்றது வாங்குகின்றோம்! […]
famine 1

You May Like