தர்மபுரி மாவட்டத்தில் காரிமங்கலம் அருகே செட்டிப்பட்டி பகுதியில் கோவிந்தசாமி (48 வயது) என்பவர் திமுக கிளைச் செயலாளராக பதவி வகித்துள்ளார். அதே பகுதியில் பாஜக ஒன்றிய தலைவரான ராஜசேகர் என்பவருக்கு கோவிந்தசாமியுடன் முன் விரோதம் இருந்தது.
எனவே இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வரும். கடந்த செப்டம்பர் மாதம் இருபதாம் தேதி கோவிந்தசாமி தன்னுடைய சகோதரி வீட்டிற்கு முன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே சென்ற ராஜசேகர் கோவிந்தசாமியை மிகவும் தகாத வார்த்தைகளை கொண்டு திட்டினார்.
இதனால் மிகுந்த அவமானத்தில் இருந்த கோவிந்தசாமி தனது வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சைக்கு சென்று வீட்டில் இருந்து வந்த கோவிந்தசாமி உயிரிழந்து விட்டார்.
இது குறித்து கோவிந்தசாமியின் மகன் புவனேஷ் என்பவர் போலீசில் புகார் கொடுத்த நிலையில், தற்கொலைக்கு தூண்டியதாக கூறி பாஜக நிர்வாகி என ராஜசேகரை போலீசார் கைது செய்து தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.