திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் உள்ள நாயுடுபுரத்தைச் சேர்ந்தவர் அப்துல் கனி ராஜா (55). இவர் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் கொடைக்கானல் ஹோட்டல் மற்றும் ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க தலைவராகவும் இருக்கிறார்.
இந்த நிலையில், கடந்த 7ம் தேதி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் அவருடைய மனைவியுடன் நாயுடுபுரம் பகுதியில் இருக்கின்ற அப்துல் கனிராஜாவுக்கு சொந்தமான விடுதியில் 2 அறைகள் எடுத்து தங்கி இருக்கின்றனர். அப்போது வழக்கறிஞரின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாக சொல்லப்படுகிறது. உடன் வந்தவர்கள் சுற்றுலா தலங்களை காண சென்று விட்ட சூழ்நிலையில், வழக்கறிஞரின் மனைவி மட்டும் அறையிலேயே தங்கி இருந்தார்.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அப்துல் கனிராஜா, வழக்கறிஞரின் மனைவி தங்கி இருந்த அறைக்கு சென்று அவருக்கு மருத்துவ உதவி செய்வதாக தெரிவித்து பாலியல் தொல்லை வழங்கியதாக சொல்லப்படுகிறது. இது குறித்து வழக்கறிஞரின் மனைவி கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அப்துல் கனி ராஜாவை கைது செய்தனர்.
அதன் பிறகு திண்டுக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திரன், கொடைக்கானல் காவல் துறை துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் தலைமையில் மேல் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து, அப்துல் கனி ராஜாவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த அழைத்துச் சென்றபோது காவல் நிலைய வாசலிலேயே அவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு உண்டானது.
அவருடைய உறவினர்கள் மற்றும் காவல் துறையினர் அவரை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் சிகிச்சைக்கு பிறகு அவரை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் ஆகவே அவருக்கு 15 நாட்கள் சிறைதண்டனை வழங்கப்பட்டதை தொடர்ந்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்