மாணவர்‌ மற்றும்‌ மாணவிகள்‌ நேரடி சேர்க்கை…! கல்விக்‌ கட்டணம்‌ ரூ.195 செலுத்த வேண்டும்‌…!

திண்டுக்கல்‌ மாவட்டம்‌, ஒட்டன்சத்திரத்தில்‌ புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில்‌ நேரடி மாணவர்‌ மற்றும்‌ மாணவிகள்‌ சேர்க்கை நடைபெற்று வருகிறது.

மாணவ, மாணவிகளிடமிருந்து சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்‌ www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம்‌ வாயிலாக வரவேறக்கப்படுகிறது. இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவிடும்‌ வகையில்‌ திண்டுக்கல்‌ அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில்‌ உதவி மையம்‌ அமைக்கப்பட்டுள்ளது.


இதற்கான கல்வித்தகுதி பத்தாம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌. விண்ணப்பக்‌ கட்டண தொகையான ரூ.50 விண்ணப்பதாரர்‌ Debit card, Credit Card,G Pay, Net Banking வாயிலாக செலுத்தலாம்‌. மற்றும்‌ கல்விக்‌ கட்டணம்‌ ரூ.195 செலுத்த வேண்டும்‌. இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பம்‌ பதிவு 1.12.2022 முதல்‌ நடைபெற்று வருகிறது. இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பம்‌ பதிவு செய்ய கடை நாள்‌ 30.12.2022 ஆகும்‌.

இணையதள நேரடி சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல்‌ குறித்த விவரங்கள்‌ கடைசி தேதிக்கு பிறகு இதே இணையதளத்தில்‌ வெளியிடப்படும்‌.

1000052621

Vignesh

Next Post

ஜனவரி-2, தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை..!

Sun Dec 18 , 2022
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நாளான சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுவதை முன்னிட்டு திருச்சி மாவட்டத்துக்கு ஜனவரி-2 ஆம் தேதி (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையானது திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கும் பொருந்தும். இந்த ஜனவரி-2 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளில் தேர்வு நடைபெறுவதாக இருந்தால் இந்த விடுமுறை […]
srirangam temple gopuram trichy

You May Like