கேம் சேஞ்சர் படத்திற்காக இயக்குனர் ஷங்கர் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா..?

நடிகர் ராம் சரண் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு, கேம் சேஞ்சர் என்று பெயரிடப்பட்டுள்ளது.. முன்னதாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2021 இல் வெளியிடப்பட்டது. ஷங்கர் இயக்கி வரும் கேம் சேஞ்சர் படத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, ஜெயராம், சுனில், நாசர், ரகுபாபு, சமுத்திரக்கனி, ஸ்ரீகாந்த் மற்றும் நவீன் சந்திரா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.. இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் இயக்கும் முதல் படம் இது தான்.. இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், சிவாஜி, எந்திரன் போன்ற மிகப்பெரிய தமிழ் வெற்றிப்படங்களை கொடுத்த ஷங்கர், 2018ல் வெளியான 2.0 படத்திற்குப் பிறகு எந்த படத்தையும் இயக்கவில்லை.

270323054028 64212c4cedee1game changer

கேம் சேஞ்சர் ஒரு அரசியல் த்ரில்லர் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.. இப்படம் 170 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2021 செப்டம்பரில் தொடங்கப்பட்டது.. ஷங்கர், கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பிலும் பிஸியாக இருக்கிறார். எனவே கேம் சேஞ்சர் படத்தின் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.. எனினும் படப்பிடிப்பு விரைவில் விரைவில் முடிக்கப்பட்டு, இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இப்படம் எப்போது வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என்று கூறப்படுகிறது..

இந்நிலையில் கேம் சேஞ்சர் படத்திற்காக இயக்குனர் ஷங்கர் மற்றும் நடிகர் ராம்சரண் ஆகியோர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்திற்காக இயக்குனர் சங்கர் 50 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். நடிகர் ராம் சரண் கேம் சேஞ்சர் திரைப்படத்திற்காக 60 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளாராம். ராம்சரண் இதற்கு முன்பு வரை, 30 முதல் 40 கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்று வந்த நிலையில் RRR படத்தின் வெற்றிக்குப் பிறகு தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது..

1newsnationuser1

Next Post

தமிழக சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல்..? இபிஎஸ் சொன்னதை கவனிச்சீங்களா..?

Sun Apr 2 , 2023
சென்னையில் இருந்து சேலம் சென்ற அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, விழுப்புரத்தில் இன்று அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர், ” அதிமுக என்பது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி. தொண்டர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நான் செயல்படுவேன். எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட கனவை நனவாக்கி நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும். பல்வேறு சோதனைகளை கடந்து வெற்றிப் […]
Edappadi Eps

You May Like