நவ.1 முதல் பைக்கில் செல்லும் இருவருக்குமே ஹெல்மெட் கட்டாயம்..!! ரூ.25,000 வரை அபராதம்..!! பரபரப்பு உத்தரவு

புதுச்சேரியில் நவ. 1ஆம் தேதி முதல் போக்குவரத்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதுவை போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ”ஒரு பக்க பார்க்கிங் புதுவை நகரப் பகுதியில் அதிகரித்து வரும் நிலையில், வாகன போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பொருட்டு பொதுமக்களின் நலன்கருதி வருகிற 1ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. எனவே பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்கள் இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நவ.1 முதல் பைக்கில் செல்லும் இருவருக்குமே ஹெல்மெட் கட்டாயம்..!! ரூ.25,000 வரை அபராதம்..!! பரபரப்பு உத்தரவு

நேரு வீதியில் 2 பக்கங்களிலும் வாகனம் நிறுத்தம் முறை தடை செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை முதல் முன்பு இருந்ததுபோல் நேரு வீதியில் வடக்கு பக்கம் மட்டும் ஒரு வரிசையில் வாகனங்களை நிறுத்த வேண்டும். இந்த நடைமுறையானது முன்பு இருந்ததுபோல் 6 மாதத்துக்கு ஒருமுறை மாற்றம் செய்யப்படும். மேலும், மாநிலம் முழுவதும் செவ்வாய்க்கிழமை முதல் இருசக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் (வாகன ஓட்டி மற்றும் அமர்ந்து செல்பவர்) கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இதை மீறி செல்பவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நவ.1 முதல் பைக்கில் செல்லும் இருவருக்குமே ஹெல்மெட் கட்டாயம்..!! ரூ.25,000 வரை அபராதம்..!! பரபரப்பு உத்தரவு

பள்ளி சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் வாகனம் பறிமுதல் செய்வதோடு அவர்களின் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு மோட்டார் வாகன சட்டப்படி அவர்களுக்கு 25,000 ரூபாய் வரை அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் நலன்கருதி செய்யப்படும் இந்த நடவடிக்கையை அனைவரும் பின்பற்றி புதுச்சேரி போக்குவரத்து காவல் பிரிவுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Chella

Next Post

வீட்டு உரிமையாளரால் கர்ப்பமான 15 வயது சிறுமி..!! உடந்தையான தாய், சகோதரி..!! திடுக்கிடும் தகவல்..!!

Sun Oct 30 , 2022
15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. சென்னை அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயல் தென்றல் நகரைச் சேர்ந்த 35 வயது பெண்ணுக்கு 15 வயதில் மகள் உள்ளார். இந்த சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அவரது தாய் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, சிறுமியை […]

You May Like