மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறு…..! நண்பனை கொன்று கிணற்றில் வீசிய 4 பேர் அதிரடி கைது…..!

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லவர் மேடு பகுதியில் சேர்ந்தவர் கிரிதரன்( 29) இவர் அக்கம் பக்கத்தில் இருக்கின்ற சிறுவர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து அவ்வப்போது மது மற்றும் கஞ்சா புகைப்படத்தை வழக்கமாக கொண்டிருந்தார்.


இந்த நிலையில் தான் கடந்த ஜனவரி மாதம் 13ஆம் தேதி காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் இருக்கின்ற புதுப்பாளையத்தெரு பகுதியில் பால் அடைந்த வீட்டிற்கு பின்புறத்தில் இருக்கின்ற கிணற்றின் அருகே நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து மது குடித்து இருக்கிறார் கிரிதரன் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அங்கிருந்து அவர் காணாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது.

ஆகவே கிரிதரனின் உறவினர்கள் சென்ற பிப்ரவரி மாதம் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் கிரிதரனை காணவில்லை என்று புகார் வழங்கினர். காவல் துறையினர் இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு கிரிதரனை தேடி வந்த நிலையில், 6 மாதங்களுக்கு பின்னர் கிரிதரனின் நண்பர்கள் குடிபோதையில் அவரை நாங்கள் தான் கொலை செய்தோம் என்று தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சில காட்சி காவல் நிலையத்தில் ஹரிஷ் இருவது தாமோதரன் (19) மற்றும் 18 வயதான 2 பேரை கைது செய்து விசாரணை நடந்தது.

காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறு கிரிதரனை அடித்து கொலை செய்து கல்லை கட்டி கிணற்றில் வீசியது தெரியவந்தது. சென்ற ஒரு மதத்திற்கு முன்னர் உடல் மேலே தெரிந்த போது மரக்கிளைகளை உடைத்து போட்டும், குப்பைகளை கொட்டியும் மறைத்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

காவல்துறையினர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை ஊழியர்கள் எலும்பு கூடாக உடலை மீட்டு உள்ளனர். அந்த கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற விதத்தில், சிவகாஞ்சி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Post

வீடியோ கால் சர்வீஸ்..!! ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு தெரியுமா..? பிரபல நடிகையின் தொழில் ரகசியத்தை உடைத்த பயில்வான்..!!

Sat Jul 15 , 2023
தமிழ் சினிமாவில் நிறைய கவர்ச்சி நடிகைகள் தங்களின் கவர்ச்சியை காட்டி நிறைய இளம் ரசிகர்களை கவர்ந்து உள்ளார்கள். அந்த வகையில், நடிகை கிரண் ரத்தோடும் ஒருவர். இவர், ஜெமினி எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே அவருக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் நன்கு வரவேற்பு அளித்தனர். இதனை அடுத்து இவருக்கு தமிழ் சினிமாவில் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன. நடிகர் கமல்ஹாசனுடன் அன்பே […]

You May Like