புதுக்கோட்டையில் இன்று உள்ளூர் விடுமுறை…! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் இன்று உள்ளூர் விடுமுறையாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை திருவப்பூரில், புகழ் பெற்ற முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெறும். நேற்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழாவும், இன்று மாலை தேரோட்டமும் நடைபெற உள்ளது.


தேரோட்டம் நடைபெறும் நிலையில் இன்று திருவப்பூரில் உள்ள அரசு அலுவலகங்கள் பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு விடுமுறை அளித்து, கலெக்டர் கவிதா ராமு அறிவித்துள்ளார். விடுமுறையை ஈடு செய்ய ஏப்ரல் 1-ம் தேதி பணி நாளாகவும், ஏப்ரல் 2-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை பணி நாளாக செயல்படும், என அறிவித்துள்ளார். 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு‌ நடைபெறும்.

Vignesh

Next Post

வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதம் அதிரடி குறைப்பு..!! வாடிக்கையாளர்கள் செம ஹேப்பி..!!

Mon Mar 13 , 2023
அரசுக்கு சொந்தமான பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, வீட்டு கடனுக்கான வட்டி விகிதம் தற்போது 8.6 சதவீதத்தில் இருந்து 8.4 சதவீதமாக குறைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வட்டி விகிதம் இன்று முதல் நடைமுறைக்கு வரும் என்றும் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் முன்பு கடன் பெற்றவர்கள் வங்கியை அணுகி தங்களுடைய வட்டி விகிதத்தை குறைத்துக் கொள்ள முடியும் […]
2 home loan how to mortgage requirements easy

You May Like