fbpx

கொடூரம்…! 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டியூஷன் ஆசிரியர்…! போலீஸ் வலை வீச்சு…!

உத்தரபிரதேச மாநிலம் சஹரன்பூரில் 15 வயது சிறுமியை டியூஷன் ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சாகர் ஜெயின் கூறியதாவது, சிறுமி வழக்கம் போல வியாழனன்று டியூஷனுக்குச் சென்றுள்ளார். ஆனால் ஆசிரியர் சிறுமியை உத்தரகாண்டின் ரூர்க்கிக்கு அழைத்துச் சென்று, அங்கு வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும், நடந்த சம்பவத்தை யாரிடமாவது தெரிவித்தால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என சிறுமியை ஆசிரியர் மிரட்டியுள்ளார். சம்பவம் தொடர்பாக சிறுமியிடம் பெற்றோர்கள் விசாரித்த போது இது வெளிச்சத்திற்கு வந்தது. இதை எடுத்து காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

Vignesh

Next Post

இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு...! வானிலை மையம் தகவல்...!

Mon May 22 , 2023
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி,மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி,மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வரும் 23-ம்‌ தேதி முதல்‌ 25-ம்‌ தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ […]

You May Like