fbpx

கணவரை பிரிந்து வாழும் பெண்களை குறிவைக்கும் வாலிபர்..!! ஆசைவார்த்தை கூறி உல்லாசம்..!! வீடியோவை காட்டி மிரட்டல்..!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த 29 வயது பெண் மற்றும் குழித்துறையைச் சேர்ந்த 26 வயது பெண் ஆகியோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, தக்கலை துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் தனித்தனியாக ஒரு புகார் கொடுத்துள்ளனர். குழித்துறை பெண் கொடுத்த புகாரில், ”எனக்கு 2014ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. 2018இல் கணவரை பிரிந்து விட்டேன். இந்நிலையில், எனது செல்போனுக்கு வந்த ‘மிஸ்டு கால்’ அழைப்பு மூலம், மார்த்தாண்டம் அருகே உள்ள மேல்புறம் பகுதியைச் சேர்ந்த 27 வயது வாலிபர் பழக்கமானார். ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாக கூறிய அவர், பல்வேறு ஆசைவார்த்தைகள் கூறியதால், நான் அவருடன் தனிமையில் உல்லாசமாக இருந்தேன். அப்போது வீடியோ மற்றும் ஃபோட்டோ எடுத்துக்கொண்ட அவர், 13 பவுன் நகைகளையும் வாங்கிச் சென்றார். என்னை திருமணம் செய்யும்படி கேட்டபோது, அவர் மறுப்பு தெரிவித்து வீடியோக்களை வெளியிடுவேன் என மிரட்டினார்” என்று புகாரில் தெரிவித்துள்ளார்.

கணவரை பிரிந்து வாழும் பெண்களை குறிவைக்கும் வாலிபர்..!! ஆசைவார்த்தை கூறி உல்லாசம்..!! வீடியோவை காட்டி மிரட்டல்..!!

அதேபோல், குளச்சலை சேர்ந்த 29 வயது பெண் கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். அப்போது தான் மேல்புறம் வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டு உள்ளது. 2ஆம் திருமணம் செய்வதாக வாலிபர் கூறியதை நம்பி நெருங்கி பழகியதோடு, நகை-பணத்தையும் இழந்துள்ளார். தற்போது திருமணம் செய்ய கேட்ட போது, வாலிபர் மறுத்து மிரட்டல் விடுப்பதாக போலீசில் கொடுத்த புகாரில் தெரிவித்து உள்ளார். இதே புகாரை மற்றொரு பெண்ணும் தெரிவித்துள்ளார். கணவரை பிரிந்து வாழும் பெண்களை குறி வைத்து, ஆசை வார்த்தைகள் கூறி பழகி உல்லாசம் அனுபவித்ததோடு, நகை-பணத்தையும் பறித்துச் சென்ற வாலிபர் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். புகார்களின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Chella

Next Post

உங்களிடம் இந்த நோட்டு இருக்கா..? அப்படினா நீங்களும் கோடீஸ்வரர்தான்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Tue Jan 10 , 2023
உங்களிடம் பழைய கரன்சி நோட்டுகள் இருந்தால், அதை வைத்துக் கொண்டு எளிதில் பணக்காரர் ஆகலாம். ஏனெனில் ஒரு இணையதளம், பழைய கரன்சி நோட்டுகளை விற்பதன் மூலம் ஆன்லைனில் பெரும் தொகையை சம்பாதிக்க வாய்ப்பளிக்கிறது. உங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டில் சில குறிப்பிட்ட அம்சங்கள் இருந்தால், அவற்றை ஆன்லைனில் ஏலம் விட்டு வீட்டில் அமர்ந்து கொண்டே எளிதாக பணம் சம்பாதிக்கலாம். மிகவும் அரிய பழைய கரன்சி நோட்டுகளை ஆன்லைனில் ஈபேயில் […]
உங்களிடம் இந்த நோட்டு இருக்கா..? அப்படினா நீங்களும் கோடீஸ்வரர்தான்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

You May Like