சொந்த தங்கையே பூர்வீக சொத்திற்காக அண்ணனை சித்திரவதை செய்த சம்பவம் கோயம்புத்தூர் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகேயுள்ள தெக்கலூரை சார்ந்தவர் தங்கதுரை. இவர் சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவரது தங்கை அம்பிகா. அவர் தனது கணவருடன் சேடப்பாளையத்தில் வசித்து வருகிறார். பூர்வீக சொத்து சம்பந்தமாக பிரச்சனை இவர்களுக்குள் நீண்ட காலமாகவே இருந்து வந்திருக்கிறது.
இந்நிலையில் தங்கதுரை இது சம்பந்தமாக பல்லடம் காவல் நிலையத்தில் தனது சகோதரி அம்பிகா மீது வழக்கு ஒன்றை பதிவு செய்திருக்கிறார். அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ள தங்கதுரை ” தனது பெற்றோர்கள் இறந்த நிலையில் சேலத்தைச் சார்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்ததாகவும் பின்னர் இரண்டு வருடங்களுக்கு முன் அவர்கள் இருவரும் விவகாரம் செய்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ள தங்கதுரை, தான் தற்போது தனியாக வசித்து வருவதாக குறிப்பிட்டிருக்கிறார். எனது தங்கை அம்பிகா அவரது கணவர் மற்றும் மகளுடன் சேர்ந்து பூர்விக சொத்து சம்பந்தமாக என்னை அடிக்கடி தொந்தரவு செய்து வருகிறார்.
மேலும் கடந்த ஜனவரி 25ஆம் தேதி தாராபுரம் பகுதியில் இருக்கும் ஒரு தோட்டத்தை விலைக்கு வாங்கலாம் என கூறியவர் தன்னை அழைத்துச் சென்று அவரது கணவன் மற்றும் மகனின் உதவியுடன் கடுமையாக தாக்கினார். தன்னை கொன்று விடுவதாக மிரட்டி 21 பத்திரங்களில் என்னிடமிருந்து கையொப்பம் வாங்கிக் கொண்டார். மேலும், எனக்கு அதிகமான மது போதையையேற்றி என்னை இயல்பு நிலைக்கு திரும்பவிடாமல் கொடுமைப்படுத்தினார் என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் தான் மயக்கம் தெளிந்து பார்த்தபோது எங்கள் ஊரிலுள்ள ஒரு மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டிருந்ததாகவும் தனது வளர்ப்புத் தாய் மற்றும் உறவினர்கள் வந்து தன்னை மீட்டதாகவும் தெரிவித்துள்ள தங்கதுரை தனது தங்கை மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.