fbpx

பைக்கில் சென்ற சிறுமியை வழிமறித்து..! போலீசில் பரபரப்பு புகார்..! போக்சோவில் சிக்கிய வாலிபர்..!

16 வயது சிறுமியை காதலிக்க சொல்லி மிரட்டிய இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர், நேற்று மாலை பெருமாள் கோயில் தெருவில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை பார்ப்பதற்காக அவரது உறவினருடன் வந்துள்ளார். பின்னர் சுவாமி தரிசனம் செய்து விட்டு உறவினருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

பைக்கில் சென்ற சிறுமியை வழிமறித்து..! போலீசில் பரபரப்பு புகார்..! போக்சோவில் சிக்கிய வாலிபர்..!

அப்போது காந்தி சிலை அருகே சிறுமி சென்ற வாகனத்தை வழிமறித்த, திண்டிவனம் தியாகி சண்முகப்பிள்ளை தெருவைச் சேர்ந்த அஸ்கர் என்பவர், சிறுமியை காதலிக்க வற்புறுத்தி தொல்லை கொடுத்துள்ளார். மேலும், காதலிக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், சிறுமியின் பெற்றோர் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அஸ்கர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திண்டிவனம் கிளை சிறையில் அடைத்தனர்.

Chella

Next Post

இந்தி படங்களுக்கு வந்த சோதனை..! ’கூவி கூவி விற்றாலும் கூட்டம் வரவில்லையாம்’..!

Sun Aug 21 , 2022
இந்தி படங்களை காண 3 டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம் என கூவி கூவி விற்றும் ரசிகர்கள் யாரும் படம் பார்க்க வராததால், திரையரங்கு உரிமையாளர்கள் வேதனையடைந்துள்ளனர். இந்தியாவின் சினிமாத்துறை என்றாலே இந்தி திரையுலகம்தான் என்ற மாயை போக்கியிருக்கிறது தென்னிந்தியாவில் இருந்து வெளியாகும் திரைப்படங்கள். பாகுபலி, புஷ்பா, கே.ஜி.எஃப், விக்ரம் போன்ற படங்கள் இந்தியில் வெளியாகி சக்கைப்போடு போட்டது. இதனால், பாலிவுட் படங்கள் மீதான மவுசு இந்தி ரசிகர்களிடையே சற்று குறைந்திருப்பது […]

You May Like