ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள சோஹ்னா பகுதியில் உள்ள பள்ளியில் 14 வயது சிறுமி கடத்தப்பட்டு மூன்று இளைஞர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின்படி, கடந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி தனது பள்ளியிலிருந்து 8-ம் வகுப்பு படிக்கும் மாணவியை மூன்று இளைஞர்கள் விளையாட்டு நிகழ்ச்சியின் போது கடத்திச் சென்று மலைப்பாங்கான பகுதிக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தனர்.
மேலும் நடந்த சம்பவத்தை யாரிடமாவது தெரிவித்தால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் சிறுமியை வீடியோவை எடுத்து அதை சமீபத்தில் சமூக ஊடகங்களில் பதிவேற்றினர். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல்துறையில், புகார் அளித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மற்றொரு பள்ளி மாணவர்கள் என்று போலீஸார் தெரிவித்தனர். “குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய தனி குழு அமைக்கப்பட்டுள்ளது., சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு விரைவில் கைது செய்யப்படுவார்கள்” என்று தெற்கு டி.சி.பி., உபாசனா சிங் தெரிவித்துள்ளார்.