fbpx

8-ம் வகுப்பு மாணவியை மலை பகுதியில் வைத்து கூட்டு பலாத்காரம்…! ஆபாச வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள சோஹ்னா பகுதியில் உள்ள பள்ளியில் 14 வயது சிறுமி கடத்தப்பட்டு மூன்று இளைஞர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின்படி, கடந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி தனது பள்ளியிலிருந்து 8-ம் வகுப்பு படிக்கும் மாணவியை மூன்று இளைஞர்கள் விளையாட்டு நிகழ்ச்சியின் போது கடத்திச் சென்று மலைப்பாங்கான பகுதிக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தனர்.

மேலும் நடந்த சம்பவத்தை யாரிடமாவது தெரிவித்தால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் சிறுமியை வீடியோவை எடுத்து அதை சமீபத்தில் சமூக ஊடகங்களில் பதிவேற்றினர். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல்துறையில், புகார் அளித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மற்றொரு பள்ளி மாணவர்கள் என்று போலீஸார் தெரிவித்தனர். “குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய தனி குழு அமைக்கப்பட்டுள்ளது., சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு விரைவில் கைது செய்யப்படுவார்கள்” என்று தெற்கு டி.சி.பி., உபாசனா சிங் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

காங்கிரஸில் இருந்து விலகிய முன்னாள் முதல்வர்...! அதிர்ச்சியில் கட்சி தலைமை...!

Mon Mar 13 , 2023
ஆந்திராவில் முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி விரைவில் பாஜகவில் இணைய உள்ளார். கிரண்குமார் ரெட்டி 2014-ஆம் ஆண்டு காங்கிரஸ் மேலிடம் மீது அதிருப்தி காரணமாக கட்சியிலிருந்து விலகி, 2018-ஆம் ஆண்டு டெல்லியில் ராகுல் காந்தியைச் சந்தித்து தன்னை மறுபடியும் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார். இந்தநிலையில் தற்போது மீண்டும் தனது விலகல் கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு அனுப்பியுள்ளதால், மூத்த தலைவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அவர் […]

You May Like