fbpx

’’ஒரு நாள் மழைக்கே தத்தளிக்கும் சென்னை’’… கூடுதல் ஏற்பாடுகளை செய்ய மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

ஒரு நாள் மழைக்கே சென்னை தண்ணீரில் தத்தளிப்பதாகவும் கூடுதல் ஏற்பாடுகளை செய்ய வலியுறுத்தி மக்கள் நீதிமய்யம் கட்சி அரசிடம் வலியுறுத்தி உள்ளது.

பருவமழை தொடங்கியுள்ளதாலும், வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஏற்பட்டதாலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதன் காரணமாகவும் தமிழகம், புதுச்சேரியில் மழை வெளுத்துவாங்குகின்றது. 5 நாட்கள் தொடர்ந்து மழை பெய்யும் என கூறப்படும் நிலையில் ஒரு நாள் மழைக்கே இங்கு சென்னை தத்தளிக்கின்றது.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ’’  போர்க்கால அடிப்படையில் கூடுதல் ஏற்பாடுகளை செய்யவேண்டும். சென்னையில் பல நூறு கோடி மதிப்பில் வடிகால் பணிகள் ஏற்கனவே தொடங்கபபட்டுள்ள நிலையில் முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட மழை பாதிப்பு அளவுக்கு தற்போது மழையின் பாதிப்பு ஏற்படவில்லை என்பது ஆறுதல் அளிக்கின்றது.

அதே நேரத்தில், ஒரு நாள் மழைக்கே சென்னை தத்தளிக்கின்றது. சென்னையில் பல நெடுஞ்சாலைகளில் நிலவிய கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் தவித்தனர். இதே போல, நகரின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் மக்கள் வேதனைக்குள்ளானார்கள். தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் பெருதும் சிரப்படுகின்றனர். சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது எனவே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை புளியந்தோப்பில் பால்கனி இடிந்து ஒரு பெண், வியாசர்பாடியில்மின்சாரம் தாக்கி ஆட்டோ ஓட்டுனரும் பலியாகி உள்ளனர். இனி ஒரு உயிரைக் கூட பறி கொடுக்காத அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம்.

நகரின் பல்வேறு பகுதிகளில் சாய்ந்த மரங்களை அகற்றுவதில், தண்ணீரை வெளியேற்றவதில் ஊழியர்கள் மழையை பொருட்படுத்தாமல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது பாராட்டவேண்டியது. இயற்கை பேரிடரை எதிர்கொள்ள கூடுதல் நடவடிக்கை வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.

Next Post

சென்னை கனமழை: சாலையில் திறந்து கிடந்த பாதாள சாக்கடையில் விழுந்த பெண் மீட்பு…

Wed Nov 2 , 2022
சென்னையில் மழை பெய்து சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் திறந்திருந்த பாதாள சாக்கடையில் விழுந்த பெண்ணை அக்கம்பக்கத்தினர் மீட்டுள்ளனர். சென்னையில் பெரம்பூர் அருகே பேரக் சாலையில் 24 வயது இளம்பெண் பிரீத்தி  சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் பாதாள சாக்கடை திறந்திருந்தது. இதை அறியாத அந்த பெண் அந்த குழிக்குள் தவறி விழுந்தார். நல்லவேளையாக உடனடியாக அங்கிருந்தவர்கள் பார்த்து அந்த பெண்ணை தூக்கினர். சுயநினைவிழந்து மயக்கநிலையில் […]
சென்னையில் விடிய விடிய மழை..!! மக்களே இதை கவனிச்சீங்களா..? மாஸ் காட்டிய தமிழ்நாடு அரசு..!!

You May Like