fbpx

பிரசவித்த பெண்ணை நடுவழியில் இறக்கிவிட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்..! குழந்தையுடன் தவித்த பரிதாபம்..!

சாலை சரியில்லை எனக்கூறி பச்சிளம் குழந்தையுடன் தாயையும் நடுவழியில் இறக்கிவிட்டு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கோடகரை பகுதியைச் சேர்ந்த 27 வயது பழங்குடியின பெண் ஒருவர் தனது 4-வது பிரசவத்துக்காக கடந்த 8ஆம் தேதியன்று ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குழந்தை பிறந்த நிலையில் 10ஆம் தேதியன்று கருத்தடை ஆபரேசன் செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று மதியம் அந்த பெண் மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தனது தாய் மற்றும் குழந்தையுடன் அரசு ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் ஊருக்கு புறப்பட்டனர். உனிசெட்டி என்ற இடத்திற்கு ஆம்புலன்ஸ் வந்தவுடன் இதற்கு மேல் சாலை வசதி சரியில்லை என்று கூறி ஆம்புலன்ஸ் டிரைவர் அவர்களை கீழே அங்கேயே இறக்கிவிட்டு சென்று விட்டார்.

பிரசவித்த பெண்ணை நடுவழியில் இறக்கிவிட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்..! குழந்தையுடன் தவித்த பரிதாபம்..!

இதற்கிடையே, பழங்குடியினர் நலத்துறை சார்பில் தேன்கனிக்கோட்டை-கோடகரை இடையே இயக்கப்படும் வாகனமும் 3 மணிக்கு புறப்பட்டுச் சென்று விட்டதால், என்ன செய்வதென்று தெரியாமல் பச்சிளங்குழந்தையுடன் அவர்கள் தவித்துள்ளனர். பின்னர், தங்களது உறவினர்களுக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் சுகாதாரத்துறை இணை இயக்குனர் பரமசிவனுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, அவரது ஏற்பாட்டில் இரவு 7 மணியளவில் வந்த வேறொரு ஆம்புலன்ஸ் மூலம் அந்த பெண் மலைக்கிராமத்துக்கு சென்றடைந்தார். உனிசெட்டியிலிருந்து கோடகரை செல்வதற்கு 15 கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பச்சிளம் குழந்தையுடன் நடு வழியில் ஆம்புலன்சிலிருந்து இறக்கிவிட்டு சென்ற இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவரை உயர் அதிகாரிகள் அழைத்து எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

பசுமாடுகளுக்காக விவசாயி அடித்து படுகொலை செய்யப்பட்ட கொடூரம்... போலீசார் விசாரணை..!!

Wed Sep 14 , 2022
மைசூருவில் இருக்கும் தூரா கிராமத்தில் வசித்து வருபவர் சோமண்ணா (50). இவர் ஒரு விவசாயி. இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து மூன்று பசுமாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றுள்ளார். ஆனால் மாலை நீண்ட நேரமாகியும் சோமண்ணா வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது குடும்பத்தினர் அவரை தேடிச் சென்றனர். அப்போது சோமண்ணா அங்கிருந்த ஒரு விவசாய நிலத்தில் இறந்து கிடந்தார். அவரது பசுமாடுகளை காணவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி […]

You May Like