ANNAMALAI | “விளம்பரத்தில் சீன கொடி; இந்திய இறையாண்மைக்கு எதிரான திமுக” – அண்ணாமலை கடும் கண்டனம்.!

ANNAMALAI: திமுக விளம்பரத்தில் சீனா கொடி இடம் பெற்றது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்.

தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற என் மண் என் மக்கள் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து மதுரையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பிரதமர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டார்.

தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு விழாக்களில் கலந்து கொண்ட பிரதமர் 17,000 கோடி ரூபாய் மதிப்புள்ளான திட்டங்களை தொடங்கி வைத்தார் இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமைய இருக்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ராக்கெட் ஏவு தளத்திற்கான அடிக்கல் நாட்டினார் .

இது இந்தியாவில் அமைய இருக்கும் இரண்டாவது ராக்கெட் ஏவுதலமாகும். முதலாவது ராக்கெட் ஏவுதளம் ஆந்திர பிரதேசத்தில் அமைந்திருக்கிறது. இந்த ராக்கெட் ஏவு தளத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள இருக்கும் பிரதமரை வரவேற்பதற்காக தூத்துக்குடி தொகுதி எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடியின் புகைப்படங்களுடன் தினசரி பத்திரிகைகளில் விளம்பரம் செய்திருந்தார்.

அந்த விளம்பரத்தில் இடம் பெற்று இருந்த ராக்கெட் சீனா கொடி இடம்பெற்று இருந்ததை தொடர்ந்து மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்திருக்கிறது. இது தொடர்பாக தனது X வலைதளத்தில் பதிவு செய்திருக்கும் அண்ணாமலை திமுக அரசு இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக இருக்கும் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறது என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பதிவு செய்த அவர் ஊழலில் திளைத்த திராவிட முன்னேற்றக் கழகத்தால் தான் முதலாவது ராக்கெட் உதலாம் தமிழகத்தில் அமையாமல் போனது எனவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.

English Summary: DMK MLA Anitha Radhakrishnan advertisement with China flag sparks new controversy. Annamalai said DMK Party always against India sovereignty.

Readmore: GUJARAT| 3,100 கிலோ போதை பொருள்கள் பறிமுதல்.! 5 பாகிஸ்தானியர்கள் கைது.!

Next Post

Mystery ship: 120 ஆண்டுகளுக்கு முன் புயலில் சிக்கி காணமால் போன கப்பல் கண்டுபிடிப்பு!… கொஞ்சம் கூட சேதமடையாத அதிசயம்!

Wed Feb 28 , 2024
Mystery ship: ஆஸ்திரேலியாவில் புயலில் சிக்கி மாயமான சரக்கு கப்பல் 120 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அதிசயம் நிகழ்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு நிலக்கரியை ஏற்றிக்கொண்டு கடந்த 1904 ஆம் ஆண்டு சரக்கு கப்பல் ஒன்று புறப்பட்டது. 240 அடி நீளம் கொண்ட இந்த பிரமாண்ட சரக்கு கப்பல் புயலில் சிக்கி கடலில் மூழ்கியது. நியு சவுத்வேல்ஸ் கடல் பகுதியில் மாயமான எஸ் எஸ் நெம்சிஸ் என்ற இந்த நீராவி […]

You May Like