இன்றைய காலத்தில் சிறிய தலைவலி என்றாலே மாத்திரைகளை எடுத்துகொள்வது மக்களிடையே வாடிக்கையாகிவிட்டது. அப்படியிருக்கையில் சில மருந்துகளை உட்கொள்ளும்போது குறிப்பிட்ட சில உணவுகளைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம். அவ்வாறு செய்யத் தவறினால், மருந்தின் செயல்பாடு மட்டுமின்றி, சில சமயங்களில் உடலில் விரும்பத்தகாத எதிர்விளைவுகளும் ஏற்படலாம்.
மருந்துகள் எடுத்துக் கொள்ளும் சமயத்தில், நாம் அருந்தும் பானங்களிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உதாரணமாக, தேநீர் அல்லது காபி போன்ற பானங்களை மருந்து சாப்பிடும்போது உடனடியாக அருந்துவது நல்லதல்ல. இவற்றில் உள்ள காஃபின் சில மருந்துகளின் செயல்திறனைக் குறைத்துவிடும். மேலும், வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரித்து அஜீரணம் போன்ற உபாதைகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. எனவே, மருந்து சாப்பிட்ட குறைந்தது ஒரு மணி நேரமாவது கழித்து இப்பானங்களை அருந்துவது நல்லது.
அதேபோல, பால் உடலுக்கு நல்லது என்பதால், எல்லா மருந்துகளையும் பாலுடன் சேர்த்து எடுத்துக்கொள்வது சரியல்ல. சில மருந்துகள் பாலில் உள்ள சில பொருட்களுடன் வினைபுரிந்து அவற்றின் செயல்பாட்டை மாற்றிவிடலாம். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பாலுடன் எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளக் கூடாது.
பலர், ஒருவேளை மருந்து எடுக்கத் தவறிவிட்டால், அடுத்த முறை இரண்டு மடங்கு எடுத்துக்கொள்வது சரியென்று நினைக்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. ஒரே நேரத்தில் அதிகப்படியான மருந்தை உட்கொள்வது உடலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தலாம், குறிப்பாக கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களைப் பாதிக்கலாம். ஒருவேளை மருந்து எடுக்க மறந்துவிட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதுதான் சரியான வழி.
பொதுவாக, தலைவலி அல்லது உடல் வலிக்கு நாம் எடுத்துக்கொள்ளும் வலி நிவாரண மாத்திரைகளை குளிர்பானங்களுடன் சேர்த்து உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், குளிர்பானங்களில் உள்ள கார்பன் டை ஆக்சைடு மற்றும் அமிலங்கள் மருந்தின் உறிஞ்சுதலைத் தாமதப்படுத்தலாம். அதுமட்டுமின்றி, இது சிறுநீரகங்களுக்கும் தீங்கு விளைவிக்கும்.
Readmore: வந்தே பாரத் இரயிலில் அசைவ உணவு கிடையாதா..? ஆன்லைன் செயலியால் ஷாக் ஆன பயணிகள்..!! – ரயில்வே விளக்கம்