தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் அனைவரும் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்துச் செல்கின்றனர்.
இந்நிலையில், செல்போனுடன் வந்தவர்கள் வாக்களிக்காமல் திரும்பிச் செல்கின்றனர். செல்போனை வாக்கு மையத்திற்கு கொண்டு செல்ல அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. இதனால், வேறுவழியின்றி, வாக்களிக்க வந்தவர்கள் திரும்பிச் செல்லும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, இனி வாக்களிக்க வருவோர், செல்போனை எடுத்துச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
Read More : நோட்டாவுக்கு அதிக வாக்கு விழுந்தால் தேர்தலே ரத்தாகுமா..? தீயாய் பரவும் செய்தி..!! உண்மை நிலவரம் என்ன..?