மனித வாழ்க்கையில் முழுமையான ஆரோக்கியத்தையும், செல்வ செழிப்பையும், ராஜயோக வாழ்க்கையையும் பெறுவதற்கு ஆன்மிக ஒழுக்க நெறிமுறைகளும், பாரம்பரிய இயற்கை உணவுப் பழக்கங்களும் மிக முக்கியமான அடிப்படையாக கருதப்படுகின்றன. ‘சும்மா இருப்பவன் புத்தி மழுங்கிவிடும்’ என்பது முன்னோர் வாக்கு.
எனவே, ஓய்வு நேரங்களிலோ அல்லது உடலால் எந்த ஒரு பெரிய செயலையும் செய்யாத தருணங்களிலோ மனதை வீணான சிந்தனைகளில் ஈடுபட விடாமல், இஷ்ட தெய்வங்களின் மந்திரங்களை மனதிற்குள் தொடர்ந்து சொல்லி வர வேண்டும்.
அதேபோல், இறைவனை தரிசிக்க ஆலயங்களுக்கு செல்லும்போது உடலையும், மனதையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். எப்போதும் முழுமையாக நீராடி, நெற்றியில் திருநீறு அல்லது குங்குமம் அணிந்து பக்தியுடன் செல்ல வேண்டும்.
கோயிலுக்குள் வீண் ஆடம்பரமாக கைகளை வீசி நடக்காமல், அடக்கத்துடனும் அமைதியுடனும் இறை நியதிகளை பின்பற்றி தரிசனம் செய்தால், நமக்குரிய தெய்வப் பிராப்தங்களும் அருளாசிகளும் தானாகவே கைகூடி வரும் என்பது நம்பிக்கை.
Read More : OTTஇல் வெளியாகிறது CM விஜய்யின் ஜனநாயகன்..!! தேதியை அறிவித்தது தயாரிப்பு நிறுவனம்..!!



