குழந்தைகள் உங்களை எதிர்த்து பேசுகிறார்களா?. என்ன காரணம் தெரியுமா?.

childrens angry

”எல்லா குழந்தைகளும் அழகுதான். அவர்களின் பொக்கைவாய்ச் சிரிப்பு, அழுகை, தவழும் முனைப்பு, எழுந்து நிற்கும் ஆர்வம், நடக்கத் துடிக்கும் ஆசை… என, அவர்கள் முதல்முதலாகச் செய்யும் விஷயங்கள் எப்போது தெரியுமா? அந்த ஒவ்வொரு செயலும், பெற்றோர்களுக்கு சொர்க்க சந்தோஷத்தைத் தரும். குழந்தை, தாயின் வயிற்றுக்குள் இருந்து வெளிவந்ததும், அதைத் தொடும்போதே அழத் தொடங்கிவிடும். இதுவரை தாயின் தொப்புள்கொடி மூலம் சுவாசித்த குழந்தை, தன் நுரையீரல் விரிவடைந்து காற்றைச் சுவாசிக்கும் புதிய அனுபவத்தைப் பெறும். முதல் அழுகை தொடங்கி, குழந்தையின் ஒவ்வொரு அடுத்தகட்ட வளர்ச்சியையும் படமாக, ஒலியாகப் பதிவு செய்யுங்கள். அவை, காலம் கடந்தும் சந்தோஷம் தரும் ஊற்றாகும்”


கொஞ்சம் வளர்ந்த குழந்தை, ஒரு பொருளை எடுக்க முயற்சிக்கும்போதோ அல்லது அழும்போதோ, உடனே அதைத் தூக்கி வைத்துக்கொண்டால், நமக்கு உதவ, நம் வேலையைச் செய்ய அம்மா அல்லது யாராவது வருவார்கள் என அது நினைத்துக்கொண்டு, தான் செய்யவேண்டியதைச் செய்யாமல் இருந்துவிடும். எனவே, குழந்தை செய்ய நினைப்பதை அதுவாகவே செய்யட்டும் என விட்டுவிட வேண்டும். அது ஒவ்வொன்றையும் தானே கற்றுக்கொள்ளட்டும் என விடுவதே சிறந்தது. செயல்பூர்வமாக அதற்குச் சிரமம் ஏற்படும்போது மட்டும் உதவலாம். வளர வளர கை, கால்களை அசைத்து தன் செயல்பாட்டை ஒவ்வொன்றாக வெளிப்படுத்தும்.

கொஞ்ச நேரம் பேச்சு அல்லது ஒலி வரும் திசையைக் கவனித்தாலே, குழந்தையின் மூளை வேலைசெய்ய ஆரம்பித்துவிடும். 4-6 மாதம் வரை தன் பேச்சை உளரலாக வெளிப்படுத்தும். பிறகு, சற்று தெளிவாகி வார்த்தைகள் பிறக்கும். அம்மா, குழந்தையிடம் அடிக்கடி பேசவும், பாட்டுப் பாடவும் வேண்டும். குழந்தைகளிடம் குழந்தைத்தனமாகவே பேசுவது நல்லது. குழந்தைகள் எல்லாவற்றையும் நன்றாகக் கவனிக்கத் தொடங்கிய பின், அவர்கள் முன் புத்தகத்தை வைத்துப் படித்தல் போன்ற நல்ல விஷயங்களைச் செய்தால், குழந்தையும் அதைப் பார்த்துக் கற்றுக்கொள்ள விரும்பும். நாம் சொல்லும் வார்த்தைகள், அதன் மனதில் பதிவாகி, அது வளர்ந்து படிக்கும் காலத்தில், நாம் முன்பு பேசிய வார்த்தைகள் பட்டென மனதில் தோன்றும்.

குழந்தைகளின் கருத்துக்கள் மறுக்கப்படும்போது அதை வெளிப்படுத்த எதிர்த்துப்பேசி தங்களை அவர்கள் மீது கவனம் கொள்ளவைப்பார்கள். குழந்தைகள் சில சமயம் வீட்டில் உள்ளவர்கள் எதிர்த்துப் பேசுவதைப் பார்த்து அதை காப்பி அடிக்க நினைப்பார்கள். மீடியாக்களில் வரும் காட்சிகள் பார்த்து அந்த மாதிரி பேசலாம் என்று தவறாக புரிந்து கொள்வார்கள். சில சமயம் மன அழுத்தத்தாலோ, பதட்டத்தாலோ அல்லது சோர்வினாலோ சரியாக பேசமுடியாத காரணத்தால் விரக்தியில் இப்படி எதிர்த்துப் பேசுவார்கள்.

சில குழந்தைகளுக்கு பெரியவர்கள் பிசியாக இருப்பதன் காரணமாக இடைவெளி ஏற்பட்டு பெரியவர்களின் கவனத்தை ஈர்க்க இப்படி எதிர்த்துப் பேசுவார்கள். குழந்தைகளுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை நீங்கள் அடிக்கடி மாற்றினால் அவர்கள் குழம்பி இப்படி எதிர்த்துப்பேசுவார்கள். தங்களைப் பற்றி குறைவான மதிப்பீடு உடைய குழந்தைகள் இப்படி எதிர்த்துப் பசி தங்கள் பலமின்மையை வெளிப்படுத்துவார்கள். குழந்தைகளின் பொழுது போக்குகளை கண்டித்தால், விவாகரத்து விஷயம் மற்றும் பள்ளி விஷயங்களில் குழந்தைகளிடம் தங்கள் கட்டுப்பாட்டைக்காட்ட அவர்கள் எதிர்த்துப் பேசி தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவார்கள்.

தங்கள் சுதந்திரத்தை நிலைநாட்ட இப்படி எதிர்த்துப் பேசுவார்கள். குழந்தைகள் எதிர்த்துப் பேசுவதற்கு காரணம், அவர்கள் வளரும்போது தங்கள் சுதந்திரம் பறிபோவதாக நினைக்கிறார்கள். இது அவர்களின் தனித்தன்மையை நிலைநிறுத்தும் வெளிப்பாடாக இருக்கலாம். அடுத்தவர்களோடு அவர்களை ஒப்பிட்டுப் பேசும்போதும், அவர்களின் செயலில் குற்றம் கண்டுபிடிக்கும்போதும் எதிர்த்துப்பேசி தங்களை காக்க நினைப்பார்கள்.

Readmore: எடை குறையும்.. நல்லா தூக்கம் வரும்.. இரவில் இதை சாப்பிடுங்க..!! எக்கச்சக்க நன்மைகள் கிடைக்கும்..

KOKILA

Next Post

பாத்திரங்களின் அடியில் கருகி கறை பிடித்துப் போச்சா?. புதிதுபோல் ஜொலிக்க சூப்பர் டிப்ஸ்!.

Thu Jun 5 , 2025
சிலர் எந்த பாத்திரத்தில் உணவு பொருட்களை வைத்திருந்தாலும் அதை அப்படியே வைத்து சூடு படுத்துவார்கள். இதனால் பாத்திரங்களின் அடியில் கருகி கறை ஏற்படும். அப்படியே சில சமயங்களில் சமைத்த பிறகு பாத்திரத்தில் அடி பிடித்து விடுவதுண்டு. இவற்றிற்கு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு தண்ணீர் ஊற்றி அந்த பாத்திரத்தை அப்படியே கொதிக்க வைக்க வேண்டும். பிறகு நன்றாக அழுத்தி தேய்த்தால் மறைந்துவிடும். பித்தளை, வெண்கலம் ,செம்பு பாத்திரங்களை எலுமிச்சை சாறுடன் உப்பு […]
burnt stains bottom 11zon

You May Like