மொபைல் போன்களில் வரும் போலியான லிங்க் மூலம் மின்கட்டணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம் என மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மின்சார வாரியம் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது; மின் கட்டணம் செலுத்த சொல்லி அறிவிக்கப்படாத எண்கள் அல்லது இணையத் தொடுப்புகளில் இருந்து வந்தால் அவற்றை தவிர்க்கவும் எனவும் அதிகாரப்பூர்வ வலைத்தளம்/மொபைல் செயலி மூலம் மட்டுமே மின் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் அந்த பதிவில், மின் கட்டணத்தை செலுத்துவதற்கு அதிகாரப்பூர்வ TNEB மொபைல் செயலி மற்றும் இணையதளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதேபோல முடிவு பெறாத மற்றும் தாமதமான பரிவர்த்தனைகளைத் தவிர்க்க வேண்டும்.
உங்களுக்கான சிறந்த சேவையை பெறுவதற்கு மின் இணைப்பு விண்ணப்பிக்கும் போது கணினி மையம் அல்லது முகவர்களின் மொபைல் எண்ணை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டாம். உங்கள் விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு மட்டுமே குறுஞ்செய்திகள் அனுப்பப்படும். அதேபோல வீடுகளுக்கு வரும் மின்சார கட்டண நிலுவைத் தொகையை மின் வாரிய அதிகாரப்பூர்வ வலைதளம் வழியாக சரிபார்க்க வேண்டும் எனவும் இலவச தொலைபேசி எண் 1930- ஐ தொடர்புகொண்டு சந்தேகங்களை கேட்டறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More: மாறும் அரசியல் களம்…! நேரடியாக விமான நிலையம் சென்று அமித் ஷாவை வரவேற்ற அதிமுக தலைவர்கள்…!