காதல் மனைவி மீது சந்தேகம்..!! மண்வெட்டியால் மண்டையை பிளந்த கணவர்..!! தூத்துக்குடியில் சோகம்..!!

தூத்துக்குடி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு காதல் மனைவியை அடித்துக் கொன்ற கணவனை காவலதுறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.


தூத்துக்குடி மாவட்டம் அருகே முத்தையாபுரம், திருமாஞ்சி நகரைச் சேர்ந்தவர் இம்மானுவேல் அப்துல்லா. இவர், மொபைல் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கன்னித்தாய் (30). இவர்களுக்கு சையத் அலி பாத்திமா மற்றும் கதிஜா பிஸ்மி என 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கன்னித்தாயின் சகோதரருடன் இம்மானுவேல் அப்துல்லா மீன்பிடித் தொழில் செய்து வந்தார். இதன் காரணமாக அவருடன் வெள்ளப்பட்டியில் உள்ள வீட்டிற்கு அடிக்கடி சென்றுள்ளார். அப்போது இம்மானுவேல் அப்துல்லாவுக்கும், கன்னித்தாய்க்கும் பழக்கம் ஏற்பட்டு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

காதல் மனைவி மீது சந்தேகம்..!! மண்வெட்டியால் மண்டையை பிளந்த கணவர்..!! தூத்துக்குடியில் சோகம்..!!

இந்நிலையில், கன்னித்தாய் நடத்தையில் சந்தேகப்பட்டு இம்மானுவேல் அப்துல்லா அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று தம்பதியினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த இம்மானுவேல் அப்துல்லா, மண்வெட்டியால் மனைவியை சரமாரியாக தாக்கி விட்டு தலைமறைவானார். இதில், சம்பவ இடத்திலேயே கன்னித்தாய் உயிரிழந்தார். தகவறிந்த முத்தையாபுரம் போலீசார் விரைந்து சென்று கன்னித்தாய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து தலைமறைவான இம்மானுவேல் அப்துல்லாவை தேடி வருகின்றனர்.

CHELLA

Next Post

மகளுக்கு 2வது திருமணம் செய்ய முயன்ற தந்தையை கொடூரமாக கொலை செய்த மருமகன்!

Tue Dec 13 , 2022
பொதுவாக காதல் என்றாலே பெற்றோர்கள் அதற்கு எதிரி என்று தான் தற்போதைய இளம் தலைமுறையினர் நினைத்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் இடத்திலிருந்து யோசித்துப் பார்த்தால் அவர்கள் இருக்கும் மனநிலை எல்லோருக்கும் நன்றாக புரிவதற்கான வாய்ப்பு உள்ளது. குறிப்பாக பெண் பிள்ளையை பெற்ற நபர்கள் தன் கண் முன்னால் கஷ்டமோ, நஷ்டமோ நம்முடைய அரவணைப்பில் வளர்ந்த, நம்முடைய பெண் யார் என்று தெரியாத ஒருவரை நம்பி சென்று நாளை ஏதாவது பிரச்சனை […]
தனிப்பட்ட வாகனங்களில் இந்த ஸ்டிக்கரை ஒட்டக்கூடாது..! தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு..!

You May Like