தமிழ்நாட்டில் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது இதற்காகவே வரும் இருபதாம் தேதி முதல் டோக்கன் வழங்கும் பணி ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக ஆரம்பமாக இருக்கிறது. இதற்கு நடுவில் சென்ற சில வாரங்களுக்கு முன்னதாக இந்த திட்டம் தொடர்பான தகவல்கள் வெளியாக தொடங்கியது.
இந்த சூழ்நிலையில் தான் இந்த திட்டத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் விண்ணப்பப் பதிவு செய்வதற்காக சிறப்பு மையங்கள் திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த திட்டம் தொடர்பான சந்தேகங்களை பூர்த்தி செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு அறை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
அதன் அடிப்படையில் சேலம் மாவட்ட மக்கள் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் அதனை பூர்த்தி செய்யும் விதமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொலைபேசி எண்களான 0427 2452202 மற்றும் 8825473639 போன்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். அதேபோல வட்டாட்சியர் அலுவலகங்களை பொறுத்தவரையில் சேலம் 042724 52121, சேலம் மேற்கு 0427 233 5611, சேலம் தெற்கு 04272271600, ஏற்காடு 042812267, வாழப்பாடி 0429223000, பெத்தநாயக்கன்பாளையம் 0428221704 போன்ற வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.