திமுக ஆட்சியில் நான்கரை ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடி ஊழல்.. துறை வாரியாக லிஸ்ட் போட்டு ஆளுநரிடம் மனு அளித்த இபிஎஸ்..!

Stalin EPS 2025

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தமிழக ஆளுநர். ஆர். என். ரவியை சந்தித்தார்.. திமுக ஆட்சியில் நடந்த ஊழல் குறித்து ஆளுநரிடம் அவர் மனு அளித்ததாக கூறப்படுகிறது.. ஆளுநரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி “ திமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் நடந்த ஊழல்கள் குறித்து ஆளுநரிடம் மனு அளித்தோம். 2021-ம் ஆண்டு முதல் திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் பட்டியலை ஆளுநரிடம் வழங்கி உள்ளோம்.. திமுகவின் ஊழல் நிறைந்த ஆட்சியில் நடந்த ஊழல்களின் விவரங்களை ஆளுநரிடம் வழங்கி, இந்த ஊழல்களுக்கு போதிய ஆதாரம் உள்ளதால் இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த கோரிக்கை வைத்துள்ளோம்..


கடந்த 56 மாதங்களாக ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல் திமுக குடும்பம் கோடிக்கணக்கில் கொள்ளையடித்து, தமிழ்நாட்டை மிகப்பெரிய கடன் சுமையில் தள்ளி உள்ளது. வருடத்திற்கு ரூ.1 லட்சம் கோடி கடன் வாங்கி, சுமார் 4 லட்சம் கோடி கடனை அதிகரித்துள்ளதே இந்த திமுக அரசின் சாதனை.. ஊழல் செய்வதை தவிர, தமிழக மக்களுக்கு இவர்கள் எந்த நன்மையும் செய்யவில்லை.. அரசின் பல்வேறு துறைகளில் மிக அதிக அளவில் ஊழல் செய்துள்ளது என்பதை ஆளுநருக்கு சுட்டிக்காட்டி உள்ளோம்.. துறை வாரியாக எவ்வளவு ஊழல் நடந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டினோம்..

நகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறை : 64,000 கோடி

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை : 60,000 கோடி

சுரங்கம், கனிமவளத்துறை : 60,000 கோடி

எரிசக்தி துறை : 55,000 கோடி

டாஸ்மாக், கலால் வரி : 50,000 கோடி

பத்திரப்பதிவு துறை : ரூ.20,000 கோடி

நெடுஞ்சாலை துறை : ரூ.20,000 கோடி

நீர் ஆதாரத்துறை : ரூ.17,000 கோடி

சென்னை மாநகராட்சி : ரூ.10,000 கோடி

தொழில்துறை : ரூ.8000 கோடி

பள்ளிக்கல்வித்துறை : ரூ.5000 கோடி

மக்கள் நல்வாழ்வுத்துறை : ரூ.5000 கோடி

வேளாண்மை துறை : ரூ.5000 கோடி

சமூக நலத்துறை : ரூ.4,000 கோடி

உயர்கல்வித்துறை : ரூ.1,500 கோடி

இந்து சமய அறநிலையத்துறை : ரூ.1,000 கோடி

ஆதி திராவிடர் நலத்துறை : ரூ.1,000 கோடி

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை : ரூ.750 கோடி

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை : ரூ.500 கோடி

சிறைத்துறை : ரூ.500 கோடி

சுற்றுலாத் துறை : ரூ.250 கோடி

பால் வளத்துறை : ரூ. 250 கோடி

இப்படி பல்வேறு துறைகளில் திமுக ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி அளவில் ஊழல் நடந்துள்ளது.. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. மக்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை.. தமிழகத்திற்கு தொழில் தொடங்க வந்த முதலீடு அண்டை மாநிலங்களுக்கு சென்றுவிட்டன. எனவே இந்த ஊழல் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம்..” என்று தெரிவித்தார்.

Read More : ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு..! பொங்கல் பரிசு ரூ.3,000; வெளியான புதிய அறிவிப்பு..!

RUPA

Next Post

“ திமுக அரசு இனியாவது முருக பக்தர்கள் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும்..” அண்ணாமலை வலியுறுத்தல்..!

Tue Jan 6 , 2026
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான விவகாரத்தில் தனிநீதிபதி உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது.. தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலை மேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற, மாண்புமிகு நீதியரசர் திரு. ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களின் […]
annamalai 1

You May Like