ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி அதிமுகவின் செயற்குழு கூட்டம்…..! மீண்டும் அறிவிப்பை வெளியிட்டார் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி….!

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற நிலையில், செயற்குழு கூட்டம் தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை பொதுத் தேர்தல் தொடர்பாகவும், தமிழகத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாகவும் அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் வரும் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பகல் 1:30 மணி அளவில் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில் அவை தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெறும் என்று கூறியுள்ளார்.

அது சமயம் கழக செயற்குழு உறுப்பினர்களான தலைமை கழக செயலாளர், மாவட்ட கழக செயலாளர் மற்றும் மாநில கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கழக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் எல்லோருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

ஆகவே எல்லோரும் அவரவருக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றுக் கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. முன்னதாக கடந்த 7ம் தேதி செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதன் பிறகு ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Next Post

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. பழைய வாகனங்கள் குறித்து போக்குவரத்துத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..

Thu Apr 6 , 2023
மாசுபாட்டை குறைக்கும் பொதுமக்கள் தங்கள் பழைய வாகனங்களை அகற்ற வேண்டும் போக்குவரத்துத்துறை வலியுறுத்தி உள்ளது.. இந்தியாவில் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில், மக்கள் தங்கள் பழைய வாகனங்களை அழிக்க வேண்டும் என்று மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்துத் துறை வலியுறுத்தி உள்ளது.. புதிய வாகனங்களை விட பழைய வாகனங்கள் அதிக மாசுக்களை வெளியிடுவதாகவும், காற்று மாசுபாட்டிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், போக்குவரத்துத் […]

You May Like