அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற நிலையில், செயற்குழு கூட்டம் தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை பொதுத் தேர்தல் தொடர்பாகவும், தமிழகத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாகவும் அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் வரும் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பகல் 1:30 மணி அளவில் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில் அவை தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெறும் என்று கூறியுள்ளார்.
அது சமயம் கழக செயற்குழு உறுப்பினர்களான தலைமை கழக செயலாளர், மாவட்ட கழக செயலாளர் மற்றும் மாநில கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கழக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் எல்லோருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
ஆகவே எல்லோரும் அவரவருக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றுக் கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. முன்னதாக கடந்த 7ம் தேதி செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதன் பிறகு ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது