Election | விளவங்கோடு இடைத்தேர்தல்..!! அதிமுக வேட்பாளராக ராணி அறிவிப்பு..!!

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ராணி போட்டியிடுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, 33 மக்களவை தொகுதிகளில் நேரடியாக அதிமுக போட்டியிடுவதாக அறிவித்தார். அதேபோல், கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக ராணி போட்டியிடுவார் என அறிவித்தார்.

விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி, கடந்த மாதம் பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதிக்கு ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

Read More : BREAKING | 1-9ஆம் வகுப்பு தேர்வுகள் ஏப்.12இல் நிறைவு..!! ஏப்.13 முதல் கோடை விடுமுறை..!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

Chella

Next Post

Savings | செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் கணக்கு இருக்கா..? சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு..!!

Thu Mar 21 , 2024
சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் என்று சொல்லப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. செல்வமகள் சேமிப்பு திட்டமானது, பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டமாகும். அதிக வட்டி வழங்கப்படும் திட்டம் என்பதால், வாடிக்கையாளர்களின் ஆதரவை இந்த திட்டம் தொடர்ந்து பெற்று வருகிறது. வெறும் ரூ.250 அல்லது நீங்கள் விரும்பும் தொகையை செலுத்தி, செல்வமகள் கணக்கை ஆரம்பிக்கலாம். இந்த திட்டத்தில், மாதா மாதம் பணம் செலுத்த வேண்டும் […]

You May Like