பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர், தனது அனுமதியின்றி இணையத்தில் உலா வரும் 5,000-க்கும் மேற்பட்ட வலைதளப் பக்கங்கள், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ஆபாசப் படங்கள், போலி சமூக வலைதள கணக்குகள் மற்றும் சாட்போட்டுகளை (Chatbots) நீக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், நடிகையின் அனுமதியின்றி ஆபாசமாக உருவாக்கப்பட்ட பக்கங்கள் மற்றும் டீப்ஃபேக் உள்ளடக்கங்களை இணையத்திலிருந்து உடனடியாக நீக்க உத்தரவிட்டது. மேலும், அவர் கோரியிருந்தபடி ரசிகர் பக்கங்களை முழுமையாக முடக்க முடியாது என்று கூறி நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
விசாரணையின் போது நீதிபதி கருத்து தெரிவிக்கையில், “ரசிகர்கள் உங்களைப் பாராட்டலாம், விமர்சிக்கலாம் அல்லது கேலி கூட செய்யலாம்; அது இந்த டிஜிட்டல் உலகின் ஒரு பகுதி. இவற்றையெல்லாம் தடை செய்ய வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் குகைக்குள்தான் வாழ வேண்டி வரும்” என்று சுட்டிக்காட்டினார்.
Read More : விஜயின் 2-வது திருமணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த சங்கீதா..! வீட்டில் நடந்த ரகசிய பேச்சுவார்த்தை..!



